ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் உங்களைத் தமிழ் இணையதளத்திற்கு வரவேற்கிறது. இந்த தளத்தில் ஸ்ரீமடத்தின் சமீபத்திய மற்றும் எதிர்வரும் நிகழ்வுகள், ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் சுற்றுப்பயண விவரங்கள் எல்லாம் காண உங்களை அழைக்கிறோம். ஆன்மீக - கலாசாரத் தொடர்புள்ள விவரங்களின் ஒரு பெட்டகமாகவும் இணையம் விளங்கும். முதல் தவணையாக இளஞ்சிறாருக்கும் பெரியோர்களுக்கும் உவப்பளிக்கும் நூல்களை இத்தளத்திள் கண்டு படித்துப் பயன் பெறலாம். காலத்தை வென்ற நம் பண்பாடு, சமயம், ஆன்மீக வாழ்க்கை முறை குறித்து நீங்கள் பட்டறிவு பெறவே நிறுவப்பட்டுள்ளது இந்த தளம்.
வேத அத்யயனம், யோகம், த்யானம், பூஜை இவற்றை கஷ்டப்பட்டு அப்யாசம் செய்வதால் கிடைக்கும் ஈஸ்வரானுபவத்தை தெய்வீகமான சங்கீதத்தின் மூலம், நல்ல ராக, தாள ஞானத்தின் மூலம் சுலபமாக பெற்றுவிடலாம். இப்படி தர்ம சாஸ்திரம் என்னும் ச்ம்ருதியைத் தந்திருக்கும் யாக்ஞவல்க்ய மகரிஷியே சொல்லி இருக்கிறார்.வீணா கானத்தை அவர் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்.கடுமையான பிரயாசை இல்லாமலே சங்கீதத்தால் மோக்ஷ மார்கத்தில் போய்விடலாம் என்கிறார்

- ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
தமிழ் தேடல்
Search Site

தெய்வத்தின் குரல் ஆடியோ

Kanchi Mahaswamigal

ஸ்ரீ சங்கர மடம் கிளைகள்

நாடு முழுவதும் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கர மடக் கிளைகள் மற்றும் அவற்றின் விபரங்களைக் காணவும்.