அறவழி வாசகம்
குழந்தைகளுக்காக
கல்வித் தெய்வம் கலைமகளே!
கருணைத் தெய்வம் கலைமகளே!
இன்பத் தெய்வம் கலைமகளே!
இனிதருள் புரிபவள் கலைமகளே!
பயிலும் மனத்து உறைமகளே!
பாவலர் பாடும் பெருமகளே!
இன்பத் தமிழன் இன்னறிவை!
எமக்கருள் புரிவாய் கலைமகளே!