ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் உங்களைத் தமிழ் இணையதளத்திற்கு வரவேற்கிறது. இந்த தளத்தில் ஸ்ரீமடத்தின் சமீபத்திய மற்றும் எதிர்வரும் நிகழ்வுகள் , ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் சுற்றுப்பயண விவரங்கள் எல்லாம் காண உங்களை அழைக்கிறோம். ஆன்மீக - கலாசாரத் தொடர்புள்ள விவரங்களின் ஒரு பெட்டகமாகவும் இணையம் விளங்கும். முதல் தவணையாக இளஞ்சிறாருக்கும் பெரியோர்களுக்கும் உவப்பளிக்கும் நூல்களை இத்தளத்திள் கண்டு படித்துப் பயன் பெறலாம். காலத்தை வென்ற நம் பண்பாடு, சமயம், ஆன்மீக வாழ்க்கை முறை குறித்து நீங்கள் பட்டறிவு பெறவே நிறுவப்பட்டுள்ளது இந்த தளம்.
நமக்கு தோன்றும் வஸ்துக்களுடைய ச்வரூபங்களெல்லாம் நம்முடைய கண்ணை பொருத்து இருக்கின்றன. கண்ணில் உள்ள 'லென்ஸ்' என்னும் ஒரு கருவியால் பார்க்கிறோம்; நமக்கு ஒரு வஸ்து ஒரு சாணுள்ளதாக தோன்றுகிறது. நம்முடைய கண்களிலுள்ள 'லென்ஸ்' வேறுவிதமாக இருந்தால் அதே ஒரு முழமாகவும் தோன்றலாம். ஆகையால் நாம் பார்பது நிஜப் பார்வை என்று எண்ண முடியவில்லை. இதைதான் வேதாந்தம் 'திருஷ்டி ஸ்ருஷ்டி வாதம் ' என்று சொல்லுகிறது
- ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் |