ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் உங்களைத் தமிழ் இணையதளத்திற்கு வரவேற்கிறது. இந்த தளத்தில் ஸ்ரீமடத்தின் சமீபத்திய மற்றும் எதிர்வரும் நிகழ்வுகள் , ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் சுற்றுப்பயண விவரங்கள் எல்லாம் காண உங்களை அழைக்கிறோம். ஆன்மீக - கலாசாரத் தொடர்புள்ள விவரங்களின் ஒரு பெட்டகமாகவும் இணையம் விளங்கும். முதல் தவணையாக இளஞ்சிறாருக்கும் பெரியோர்களுக்கும் உவப்பளிக்கும் நூல்களை இத்தளத்திள் கண்டு படித்துப் பயன் பெறலாம். காலத்தை வென்ற நம் பண்பாடு, சமயம், ஆன்மீக வாழ்க்கை முறை குறித்து நீங்கள் பட்டறிவு பெறவே நிறுவப்பட்டுள்ளது இந்த தளம்.
பயமும் அபயமும் ஒன்றுக்கொன்று எதிரானது. அதனால் பயத்தின் ஸ்தாபனம் மோக்ஷதிற்க்கு எதிராக இருக்க வேண்டும். மோக்ஷம் என்றால் 'விடுபட்ட நிலை'. அதற்கு எதிர் 'கட்டுப்பட்ட நிலை'. இதை 'பந்தம்' என்பார்கள். 'பந்த மோக்ஷம்' என்று சொல்வது வழக்கம். லோக வாழ்க்கையான சம்சாரம் தான் பந்தம். சம்சார பந்தம் என்று சேர்த்தே சொல்கிறோமல்லவா ?
- ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் |