ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் உங்களைத் தமிழ் இணையதளத்திற்கு வரவேற்கிறது. இந்த தளத்தில் ஸ்ரீமடத்தின் சமீபத்திய மற்றும் எதிர்வரும் நிகழ்வுகள் , ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் சுற்றுப்பயண விவரங்கள் எல்லாம் காண உங்களை அழைக்கிறோம். ஆன்மீக - கலாசாரத் தொடர்புள்ள விவரங்களின் ஒரு பெட்டகமாகவும் இணையம் விளங்கும். முதல் தவணையாக இளஞ்சிறாருக்கும் பெரியோர்களுக்கும் உவப்பளிக்கும் நூல்களை இத்தளத்திள் கண்டு படித்துப் பயன் பெறலாம். காலத்தை வென்ற நம் பண்பாடு, சமயம், ஆன்மீக வாழ்க்கை முறை குறித்து நீங்கள் பட்டறிவு பெறவே நிறுவப்பட்டுள்ளது இந்த தளம்.
பிறவி எடுதிருப்பதின் பிரயோஜனமே யாரிடமாவது ஒருவரிடம் மாறாத ப்ரியம் வைப்பதுதான். நாம் ப்ரியம் வைக்கும் பொருள் நம்மோடு எந்தக் காலத்திலும் சண்டைக்கு வராததாக இருக்க வேண்டும். நம்மைவிட்டு எக்காலத்திலும் பிரிந்து போகாததாக இருக்க வேண்டும். அந்த வஸ்துவிடம் ப்ரியம் வைத்தால்தான் நம் ஜன்மம் பிரயோஜனம் உடையதாகும். நாம் எல்லாரும் எந்த வஸ்து வினிடமிருந்து உண்டாகி, எந்த வஸ்துவினோடு முடிவில் ஐக்கியமாக விடுகிறோமோ அந்த வஸ்துவிடம் வைக்கிற ப்ரியம் தான் சாஸ்வதமானது.அந்த வஸ்துவைத் தான் ஸ்வாமி என்கிறோம்.
- ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் |


