அறவழி வாசகம் சிவன் சிவன் சிவன் எங்கள் சிவன் சீரும் சிறப்பும் நல்கும் சிவன் சித்தம் அடக்கிச்

அறவழி வாசகம்

சிவன்

சிவன்
சிவன் சிவன் எங்கள் சிவன்
சீரும் சிறப்பும் நல்கும் சிவன்
சித்தம் அடக்கிச் சிந்திப் பாவர்க்கு
சிறந்த அருளைப் புரியும் சிவன்
கருணை யோடு காலை மாலை
காக்க வேண்டித் தொழுப வர்க்கு
காளை மீது வந்து அருளும்
கயிலை வாழும் எங்கள் சிவன்.