விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் இருபத்துநான்காவது- ஆதிசேடன்உபாசித்தது வியன்மிகுங்கைலாசபதிமுடியிருத்தலினவ்வித்தகர்த்தாள்வணங்கும் விபுத

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

இருபத்துநான்காவது- ஆதிசேடன்உபாசித்தது

வியன்மிகுங்கைலாசபதிமுடியிருத்தலினவ்வித்தகர்த்தாள்வணங்கும்

விபுதர்முனிவரினுமேலோனாயெணியவனந்தனைவீழ்த்திநிலமோதலு

மயர்வாய்ப்பணங்கிழிந்தஞருறீஇயருமகதிமுனியுதவுமனுவைநோற்க

வந்தவண்பிரசன்னமாங்கணேசர்க்குதரவனைபந்தமாகியவனா

சியலொரீஇப்பிரவாளநகரத்திலாலயமொடெந்தையருண்மேனியுங்கண்

டினியவபிடேகார்ச்சனாதிசின்னாள்செய்திருந்தடைவின்முற்பணித்த

நியமனப்படியாதிசேகரத்தைந்தலைநிலமேந்தவோராயிர

நிலவுபந்திச்சுடிகையுடனினிதமர்ந்தனனிகரிலிசையோங்கமாதோ

இதன் சரித்திர சங்கிரகம்

ஸ்ரீகைலாயத்தில் பார்வதி சஹிதராய் சாம்பமூர்த்தி சிங்காசனத்தில் வீற்றிருக்கும் போது தேவர்கள் முனிவர்கள் வந்து சாஷ்டாங்கநமஸ்கராஞ்செய்து பிரார்த்தித்துக் கொண்டிருக்கையில் ஜடாமகுடத்திருந்த சேடன் இவ்வகை மகிமை பெற்ற சிவபெருமான் திருமுடியி லிருக்கின்றோ மல்லவாவென்று அகங்கரித்தெண்ணினவளவில் பரமசிவத்தாற் றுண்ணென்றிழுத்து நிலத்தின் மோதப்பட்டவனோர் சிரமாயிரம்பிளவாகி உலகத்தைத் தாங்குகின்ற வலியும் தவங்களாற் கிடைத்த மகத்வங்களுமிழந்து மிகவுந் துன்புற்று தான் முன் போல சிவபிரான் சார்புறு முபாயத்தைக்கருதி ஒன்றுந்தோற்றாது சுவாசமற்றவனாயிருக்கையில் அவண்வந்த நாரதமுனிவரா லனுக்கிரகிக்கப்பட்ட சடாக்ஷர மந்திரத்தை ஜெபித்து சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து வருகையில் விநாயக மூர்த்தி பிரசன்னமாகி சிவபெருமான் ஜடாபாரத்திலைந்துசிரங்களோடமர்ந்திருக்கவும், பிளந்த பிளவாயிரமும் ஆயிரம் சிரங்களாகி முன்போலவே பூமியைத்தாங்கி யிருக்கவும், அதுபோதிருந்த வோர் சிரசுடன் தமக்குதரபந்தனமாக விருக்கவும், அனுக்கிரகிக்க அவ்விதமே தனதோரம்சங்கொண்டு விநாயகக்கடவுளிடத்தமர்ந்து மற்ற அம்சங்களோடு பிரவாள நகரத்தில் ஓராலயஞ்சமைத்து விநாயக மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து பரிமள திரவியங்களாலபிஷேகித்து திவ்வியபுட்பங்களாலர்ச்சனை செய்து ஆராதித்துப் பெற்ற வரத்தினால் சிவபெருமான் திருமுடியில் முன்போல வசிக்கவும் உலகினைத்தாங்கவும் பெற்றகமகிழ்ந்திருந்தனன்.

***********************************************************************