திருவிசைப்பா
திருப்பூவணம்
(தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில் உள்ளது.)
பாடல்
"பாம்பணைத்துயின்றோன் அயன்முதல் தேவர்
பன்னெடுங்காலம் நின்காண்பான்
ஏம்பலித்திருக்க என்னுளம் புகுந்த
எளிமையை என்றும் நான்மறக்கேன்
தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத்
தெளிதருதேறல் பாய்ந்து ஒழுகும்
பூம்பணைச்சோலை ஆவணவீதிப்
பூவணங்கோயில் கொண்டாயே". (கருவூர்தேவர்)