சித்திர ஆதிசங்கரர் - பகுதி 31 - Illustrated Adi Shankara | Sri Kanchi Kamakoti Peetham
  1. Home
  2. Articles
  3. சித்திர ஆதிசங்கரர்
  4. சித்திர ஆதிசங்கரர் - பகுதி 31
சித்திர ஆதிசங்கரர்

சித்திர ஆதிசங்கரர் - பகுதி 31

Sri Kanchi Kamakoti Peetham

காஞ்சியில் பிற மதத்தவர்களும் இருந்தனர். மற்றும் பாரதத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல மகாபண்டிதர்கள் நம் ஆசாரியருடன் வாதிட வந்தனர். அவ்வாறு வந்திருந்த பலரில் தாம்பரபரணி தீரமான

பிரம்மதேசத்தில் இருந்து வந்த ஏழு வயது சிறுவன் ஒருவனும் இருந்தான். அவன் தொடர்ந்து மூன்று நாட்கள் ஆசாரியருடன் வாதிட்டான். அவனது கேள்விகளுக்கு விடையளித்து இருதியில் ஆசாரியரே வெற்றி பெற்றார். அந்தச் சிருவனின் அறிவுத்திறமையை வியந்து பாராட்டிய சங்கரர், அவனுக்கு சர்வக்ஞஆத்ம முனி என்று திருநாமம் சூட்டித் துறவ்யாக்கினார். தமது பீடத்தின் முதல் சிஷ்யனாக நியமித்துக் கொண்டார்.

அனைவரையும் அத்வைதத்தால் வென்று அப்பீடத்தில் அறிவுச்சக்கரவர்த்தியாக ஆரோகனிந்தார் சங்கரர். அப்போது நாடாளும் சக்கரவர்த்திகளும் அவருக்குச் சாமரம் வீசினர்.

பண்டித ரத்தினங்கள், துறவி, வேந்தர்கள் அனைவரும் அப்போது அவரது அடிபணிந்தனர்.

"ஜய ஜய சங்கரா"என்று போற்றிப் புகழிந்து பணிந்தனர்.

சித்திர ஆதிசங்கரர் - பகுதி 31