திருநாவுக்கரசர் அருளிய தேவராகத் திருப்பதிகங்கள் நான்காம் திருமுறை 1, திரு அதிகைவீராட்டானம், கொல்லி கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்- கொடுமைபல செய்தன ந

திருநாவுக்கரசர் அருளிய தேவராகத் திருப்பதிகங்கள்

நான்காம் திருமுறை

1, திரு அதிகைவீராட்டானம், கொல்லி

கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-

கொடுமைபல செய்தன நான் அறியேன்;

ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும்

பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;

தோற்றாது என் வயிற்றின் அகம்படியே

குடரோடு துடக்கி முடக்கியிட,

ஆற்றேன், அடியேன்;- அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே! 1

நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன்;

நினையாது ஒருபோதும் இருந்து அறியேன்;

வஞ்சம்இது ஒப்பது கண்டு அறியேன்;

வயிற்றோடு துடக்கி முடக்கியிட,

நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை

நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்;

"எஞ்சேலும் !" என்னீர் - அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே! 2

பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்!

படுவெண்தலையில் பலி கொண்டு உழல்வீர்!

துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்

சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர்-

பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர்!

பெற்றம் ஏற்று உகந்தீர்! சுற்றும் வெண்தலை கொண்டு,

அணிந்தீர்! அடிகேள்! அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே! 3

முன்னம், அடியேன் அறியாமையினான்

முனிந்து, என்னை நலிந்து முடக்கியிட,

பின்னை, அடியேன் உமக்கு ஆளும்பட்டேன்

சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர்;

தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ

தலை ஆயவர்தம் கடன் ஆவதுதான்?-

அன்னம் நடையார் அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே! 4

காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால்,

கரை நின்றவர், "கண்டுகொள்!" என்று சொல்லி,

நீத்து ஆய கயம் புக நூக்கியிட,

நிலைக் கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்;

வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன்;

வயிற்றோடு துடக்கி முடக்கியிட

ஆர்த்தார் - புனல் ஆர் அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே! 5

சலம் பூவொடு, தூபம், மறந்து அறியேன்;

தமிழோடு இசைபாடல் மறந்து அறியேன்;

நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்;

உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்;

உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்!

உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய்!

அலந்தேன், அடியேன்; - அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே! 6

உயர்ந்தேன், மனைவாழ்க்கையும் ஒண் பொருளும்

ஒருவர் தலை காவல் இலாமையினால்;

வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்,

வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர்

பயந்தே என் வயிற்றின் அகம்படியே

பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட, நான்

அயர்ந்தேன், அடியேன்;- அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே! 7

வலித்தேன் மனைவாழ்க்கை, மகிழ்ந்து அடியேன்

வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்;

சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை;

சங்கவெண்குழைக் காது உடை எம்பெருமான்!

கலித்தே என் வயிற்றின் அகம்படியே

கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன,

அலுத்தேன், அடியேன்:- அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே! 8

பொன் போல மிளிர்வது ஓர் மேனியினீர்!

புரிபுன்சடையீர்! மெலியும் பிறையீர்!

துன்பே, கவலை, HE, என்று இவற்றை

நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்!

என்போலிகள் உம்மை இனித் தெளியார்;

அடியார் படுவது இதுவே ஆகில்;

அன்பே அமையும் - அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே! 9

போர்த்தாய், அங்கு ஓர் ஆனையின் ஈர் உரி தோல்!

புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்!

ஆர்த்தான் அரக்கன்தனை மால்வரைக்கீழ்

அடர்த்திட்டு, அருள்செய்த அது கருதாய்

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்,

என் வேதனை ஆன விலக்கியிடாய் -

ஆர்த்து ஆர் புனல் சூழ் - அதிகைக் கெடில

வீரட்டானத்து உறை அம்மானே! 10