நமக்கான வழி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

நம் மாதிரியான பெருவாரி ஸாதாரண ஜனங்களுக்கு நிஷ்காம்ய கர்மாவும், பக்தியும்தான் ஞான மார்க்கத்துக்கான யோக்யதையை ஸம்பாதித்துத் தருபவை. ஆனால் இப்படி ஸத்கர்மா செய்யும்போதும், பக்தி உபாஸனை செய்யும்போதுங்கூட இவற்றிலே கிடைக்கும் த்ருப்திக்காக மாத்திரம் இவற்றைச் செய்வதென்றில்லாமல், நித்ய ஸெளக்யமான, சாச்வத சாந்த பதமான, ஸத்யங்களுக்கெல்லாம் மேலான ஒரே ஸத்யமாக உள்ள அத்வைத லக்ஷ்யத்துக்குப் போகவே இவை படிகள் என்ற நினைப்பை விடாமல் செய்யவேண்டும்.

லோக வாஸனைகளில் நன்றாகத் தடிப்பேற்றிக்கொண்டு ஒழுங்கு கெட்டுப்போன நாம முதலில் லோக கார்யங்களை ஒழுங்காகச் செய்து அந்தத் தடிப்பைத் தேய்த்துத் தேய்த்துக் கரைத்துவிட்டு அப்புறந்தான் லோகத்தைவிட்ட ஆத்மாவுக்குப் போகவேண்டும். அதாவது, முதலில் தர்ம மார்க்கத்தில் போய், அப்புறம்தான் ப்ரஹ்மத்துக்கு முயலவேண்டும். தர்மம் என்பது ஸத்கர்மம் வழியாகவே ஆற்றப்படுவது. அதனால்தான் இன்னாருக்கு இன்ன கர்மம் என்று பக்வம் பார்த்து, அதிகார பேதம் பார்த்துப் பிரித்துக் கொடுத்திருக்கும்போது அப்படிப்பட்ட கர்மத்தையே அவரவருக்கும் ஸ்வகர்மம் என்று சொல்லாமல் ஸ்வதர்மம் என்று சொல்லியிருப்பது.

வ்யாதி போன பிற்பாடுதான் விருந்து சாப்பிடமுடியும். ஆத்மானந்தமாகிய அம்ருத போஜனம் பண்ணணுமென்றால் முதலில் கர்ம வ்யாதிகளையும் மனோ வ்யாதியையும் போக்கிக் கொள்ளளவேண்டும். (மனோ வ்யாதி என்றால் மனஸுக்கு ஏற்படும் க்லேசம், ப்ரேமை போன்ற வ்யாதியைச் சொல்லவில்லை. மனஸே ஒரு வ்யாதியாக ஆத்மாவிலே தோன்றியிருப்பதைத்தான் சொல்கிறேன்.)

மனஸின் உயர்ந்த பண்புகளோடு கலந்து சரீரத்தின் வேலைகளை அதிகமாகக் கொண்டிருக்கும் தர்ம கர்மாக்கள் மூலமும், சரீரத்தின் வேலைகள் குறைவாகவும் மனஸின் உத்தம குணங்களே அதிகமாக இருக்கும் பக்தி உபாஸனையினாலும் கர்ம வ்யாதி, மனோ வ்யாதிகளைப் போக்கிக் கொள்ளவேண்டும். ஆரம்பத்தில் சரீர ப்ரஜ்ஞை மிகவும் அதிகமாதலால் கர்மாவுக்கு முக்யத்வம். அப்புறம் பக்திக்கு முக்யத்வம். அப்புறம்தான் ஆத்ம விசாரமே முக்யமாகிற நிலைக்குப்போவது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அநுபூதி பெற்றோர் விஷயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பிற மார்க்கத் தொடர்பு, எதையும் கண்டிக்கலாகாது
Next