பெரும்புறக்கடலை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஏழாம் பத்து

பெரும்புறக்கடலை

திருக்கண்ணமங்கை

திருக்கண்ணமங்கைத் திருமாலுக்குப் பக்தவத்சலப்பிரான், பத்தராவிப் பெருமாள் என்னும் திருநாமங்கள் உள்ளன. தாயார் அபிஷேகவல்லி. திருக்கண்ணமங்கைப் பெருமானிடம் ஆழ்வார் தம் மனத்தைப் பறிகொடுத்து ஈண்டுப் பாடியுள்ளார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பத்தராவிப் பெருமாளைக் கண்டுகொண்டேன்

1638. பெரும்பு றக்கட லையட லேற்றினைப்

பெண்ணை யாணை,எண் ணில்மனி வர்க்கருள்

தருந்த வத்தைமுத் தின்திரள் கோவையைப்

பத்த ராவியை நித்திலத் தொ த்தினை,

அரும்பி னையல ரையடி யேன்மனத்

தாசை யைஅமு தம்பொதி யின்சுவைக்

கரும்பி னைக்,கனி யைச்சென்று நாடிக்

கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே. 1

எல்லாப் பொருள்களுமாக இருப்பவன் பக்தவத்சலன்

1639. மெய்ந்த லத்தவத் தைத்திவத் தைத்தரும்

மெய்யைப் பொய்யினைக் கையிலோர் கங்குடை,

மைந்நி றக்கட லைக்டல் வண்ணனை

மாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை,

நென்ன லைப்பக லையிற்றை நாளினை

நாளை யாய்வரும் திங்களை யாண்டினை,

கன்ன லைக்கரும் பினிடைத் தேறலைக்

கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே. 2

நான் தேடிய தெய்வம் பக்தவத்சலனே

1640. எங்க ளுக்கருள் செய்கின்ற ஈசனே

வாச வார்குழ லாள்மலை மங்கைதன்

பங்க னை,பங்கில் வைத்துகந் தான் றன்னைப்

பான்மை யைப்பனி மாமதி யம்தவழ்

மங்கு லைச்,சுட ரைவட மாமலை

உச்சி யை,நச்சி நம்வணங் கப்படும்

சங்கு லை,பசு லைச்சென்று நாடிக்

கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே. 3

எனக்கு உற்றுழி உதவுபவன் பக்தவத்சலன்

1641. பேய்மு லைத்தலை நஞ்சுண்ட பிள்ளையைத்

தெள்ளி யார்வணங் கப்படுந் தேவனை,

மாய னைமதிள் கோவலி டைகழி

மைந்த னையன்றி யந்தணர் சிந்தையுள்

ஈச னை,இலங் கும்சுடர்ச் சோதியை

எந்தை யையெனக் கெய்ப்பினில் வைப்பினை

சாசி னைமணி யைச்சென்று நாடிக்

கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே. 4

இம்மைக்கும் மறுமைக்கும் மருந்து இவனே

1642. ஏற்றி னையிம யத்துளெம் மீசனை

இம்மை யைமறு மைக்கு மருந்தினை,

ஆற்ற லை அண்டத் தப்புறத் துய்த்திடும்

ஐய னைக்கையி லாழியன் றேந்திய

கூற்றி னை,குரு மாமணிக் குன்றினை

நின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை,

காற்றி னைப்புன லைச்சென்று நாடிக்

கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே. 5

திருமங்கை மணாளன் திருக்கண்ணமங்கையில் உள்ளான்

1643. துப்ப னைத்துரங் கம்படச் சீறிய

தோன்ற லைச்சுடர் வான்கலன் பெய்ததோர்

செப்பி னை,திரு மங்கைம ணாளனைத்

தேவ னைத்திக ழும்பவ ளத்தொளி

ஒப்ப னை,உல கேழினை யூழியை

ஆழி யேந்திய கையனை அந்தணர்

கள்பி னை,கழு நீர்மல ரும்வயல்

கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே. 6

மூவரில் முதல்வன் பக்தவத்சலன்

1644. திருத்த னைத்திசை நான்முகன் தந்தையைத்

தேவ தேவனை மூவரில் முன்னிய

விருத்த னை,விளங் கும்சுடர்ச் சோதியை

விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய

அருத்த னை,ரி யைப்பரி கீறிய

அப்ப னைஅப்பி லாரழ லாய்நின்ற

கருத்த னை,களி வண்டறை யும்பொழில்

கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே. 7

பக்தர்களின் தலைமேல் இருப்பவன் பக்தவத்சலன்

1645. வெஞ்சி னக்களிற் றைவிளங் காய்விழக்

கன்று வீசிய ஈசனை, பேய்மகள்

துஞ்ச நஞ்சுசு வைத்துண்ட தோன்றலைத்

தோன்றல் வாளரக் கன்கெடத் தோன்றிய

நஞ்சி னை,அமு தத்தினை நாதனை

நச்சு வாருச்சி மேல்நிற்கும் நம்பியை,

கஞ்ச னைத்துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக்,

கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே. 8

பக்தவச்சலனைக் கண்ணாரக் கண்டேன்

1646. பண்ணி னைப்பண்ணில் நின்றதோர் பான்மையைப்

பாலுள் நெய்யினை மாலுரு வாய்நின்ற

விண்ணி னை,விளங் கும்சுடர்ச் சோதியை

வேள்வி யைவிளக் கினொளி தன்னை,

மண்ணி னைமலை யையலை நீரினை

மாலை மாமதி யைமறை யோர்தங்கள்

கண்ணி னை,கண்க ளாரள வும்நின்று

கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே. 9

கண்ணபிரானே!நீகூட இப்பாடல்களைச் சுவைக்கலாம்

1647. 'கண்ண மங்கையுள் கண்டுகொண்டேன்'என்று

காத லால்கலி கன்றியு ரைசெய்த,

வண்ண வொண்டமி ழொன்பதோ டொன்றிவை

வல்ல ராயுரைப் பார்மதி யம்தவழ்

விண்ணில் விண்ணவ ராய்மகிழ் வெய்துவர்

மெய்ம்மை சொல்லில்வெண் சங்கமொன் றேந்திய

கண்ண, நின்றனக் கும்குறிப் பாகில்

கற்க லாம்கவி யின்பொருள் தானே. 10

அடிவரவு: பெரும்புறம் மெய் எங்களுக்கு பேய் ஏற்றினை துப்பனை திருத்தனை வெஞ்சினம் பண்ணினை கண்ணமங்கை -- சிலை.















 





 










 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கள்ளம்மனம்
Previous