சிங்கமதாய்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஏழாம் பத்து

சிங்கமதாய்

திருவழுந்தூர்-2

இப்பகுதிப் பாடல்களும் திருவழுந்தூர் ஆமருவியப்பன் விஷயமாகப் £டப்பட்டனவே.

கலி நிலைத்துறை

நரசிங்கனை நான் கண்ட இடம் திருவழுந்தூர்

1598. சிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த,

சங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை,

செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற,

அங்கம லக்கண்ணனை அடியேன் கண்டு கொண்டேனே! 1

பரசுராமனை நான் கண்டு நினைத்த இடம் இது

1599. கோவா னார்மடியக் கொலையார்மழுக் கொண்டருளும்,

மூவா வானவனை முழுநீர்வண் ணனை,அடியார்க்கு,

ஆவா என்றிரங்கித் தென்னழுந்தையில் மன்னிநின்ற,

தேவாதி தேவனையான் கண்டுகொண்டு திளைத்தேனே. 2

உலகம் படைத்தவனை அடைந்து உய்ந்த இடம் இது

1600. உடையா னையலிநீ ருலகங்கள் படைத்தானை,

விடையா னோடவன்று விறலாழி விசைத்தானை,

அடையார் தென்னிலங்கை யழித்தானை அணியழுந்தூர்

உடையானை,அடியே னடைந்துய்ந்து போனேனே. 3

குன்றினால் மழை தடுத்தவனை நான் கண்ட இடம் இது

1601. குன்றால் மாரிதடுத் தவனைக்குல வேழமன்று

பொன்றா மை,அதனுக் கருள்செய்த போரேற்றை,

அன்றா வின்நறுநெய் யமர்ந்துண்ண அணியழுந்தூர்

நின்றா னை,அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே. 4

கண்ணனைக் கண்டுகொண்ட இடம் இது

1602. கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ணமங்கையுள் நின்றானை,

வஞ்சனப் பேய்முலையூ டுயிர்வாய்மடுத் துண்டானை,

செஞ்சொல் நான்மறையோர் தென்னழுந்தையில் மன்னிநின்ற

அஞ்சனக் குன்றந்தன்னை யடியேன்கண்டு கொண்டேனே. 5

யாவர்க்கும் அரியவனைக் கண்டுகொண்ட இடம் இது

1603. பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்,

உரியானை யுகந்தா னவனுக்கு முணர்வதனுக்

கரியானை, அழுந்தூர் மறையோர்க ளடிபணியும்

கரியானை, அடியேன் கண்டுகொண்டு களித்தேனே. 6

அழுந்தூரில் ஆமருவியப்பனைக் கண்டு களித்தேன்

1604. திருவாழ் மார்வன்றன்னைத் திசைமண்ணீ ரெரிமுதலா,

உருவாய் நின்றவனை யலிசேரும் மாருதத்தை,

அருவாய் நின்றவனைத் தென்னழுந்தையில் மன்னநின்று

கருவார் கற்பகத்தைக் கண்டுகொண்டு களித்தேனே. 7

நிலமகள் கணவனை அழுந்தூரில் கண்டு களித்தேன்

1605. நிலையா ளாகவென்னை யுகந்தானை, நிலமகள்தன்

முலையாள் வித்தகனை முதுநான் மறை வீதிதொறும்,

அலையா ரும்கடல்போல் முழங்கழுந்தையில் மன்னிநின்ற

கலையார் சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே. 8

திருமகள் கணவனை நான் கண்டு களித்த இடம் இது

1606. பேரா னைக்குடந்தைப் பெருமானை, இலங்கொளிசேர்

வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை,

ஆரா வின்னமுதைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற,

காரார் கருமுகிலைக் கண்டுகொண்டு களித்தேனே. 9

தேவர் உலகை ஆள்வர்

1607. திறல்முரு கனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற

அறமுதல் வனவனை அணியாலியர் கோன்,மருவார்

கறைநெடு வேல்வலவன் கலிகன் றிசொல் ஐயிரண்டும்,

முறைவழு வாமைவல்லார் முழுதாள்வர் வானுலகே. 10

அடிவரவு:சிங்கம் கோ உடையானை குன்றால் கஞ்சன் பெரியானை திரு நிலை பேரானை திறல் -- திரு.














 





 










 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is தந்தை காலில்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  திருவுக்கும்
Next