1
மஹாயோக பீடே தடே பீமரத்யா :
வரம் புண்டரீகாய தாதும் முனீந்த்ரை: !
ஸமாகத்ய திஷ்டந்த மானந்த கந்தம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!
வரம் புண்டரீகாய தாதும் முனீந்த்ரை: !
ஸமாகத்ய திஷ்டந்த மானந்த கந்தம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!
பொருள்: பீமரதியாற்றின் கரையில் யோகபீடத்தில், புண்டரீகனுக்கு வரம் கொடுப்பதற்காக முனிவர்களுடன் வந்து அருள்பாலிக்கிற ஆனந்தமே உருவான, பரப்ரஹ்மவடிவமான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்
2
தடித்வாஸஸம் நாலமேகாவபாஸம்
ரமாமந்திரம் ஸுந்தரம் சித்ப்ரகாசம் !
வரம் த்விஷ்டகாயாம் ஸமந்யஸ்தபாதம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!
ரமாமந்திரம் ஸுந்தரம் சித்ப்ரகாசம் !
வரம் த்விஷ்டகாயாம் ஸமந்யஸ்தபாதம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!
பொருள்: மின்னலொத்த வஸ்திரம் தரித்தவளும், நீலமேகம் போன்று விளங்குபவளும், லக்ஷ்மி வஸிக்குமிடமாயும், அழகானவளும், ஞானவடிவனாயும், இஷ்டகைக்கல்லில் ஸமமாக வைத்தக்கால்களையுடையவராயுமுள்ள பரப்ரஹ்மச் சுவரான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்
3
ப்ரமாணம் பவாப்தேரிதம் மாமகாநாம்
நிதம்ப:கராப்யாம் த்ருதோ யேந தஸ்மாத் !
விதாதுர்வஸத்யை த்ருதோ நாபிகோச:
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!
நிதம்ப:கராப்யாம் த்ருதோ யேந தஸ்மாத் !
விதாதுர்வஸத்யை த்ருதோ நாபிகோச:
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!
பொருள்: என்னையண்டிய பக்தர்களுக்கு ஸம்ஸாரக் கடலின் எல்லை இதுதான் என இடுப்பில் கை வைத்து காட்டுபவர் அவர். பிரம்மதேவன் வஸிப்பதற்கென்றே நாபியில் கமலத்தையும் தரிக்கிறார். அப்படிப்பட்ட பரம்பொருளின் ஸ்வரூபனான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்
4
ஸ்புரத்கௌஸ்து பாலங்க்ருதம் கண்டதேசே
ஸ்ரீயா ஜுஷ்டகேயூரகம் ஸ்ரீநிவாஸம் !
சிவம் சாந்த மீட்யம் வரம் லோக பாலம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!
ஸ்ரீயா ஜுஷ்டகேயூரகம் ஸ்ரீநிவாஸம் !
சிவம் சாந்த மீட்யம் வரம் லோக பாலம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!
பொருள்: கழுத்தில் மிளிரும் கௌஸ்துப மணியையுடையவரும், (லக்ஷ்மி) அழகுடன் கூடிய தோள்வாளையணிந்தவளும், ஸ்ரீநிவாஸனும், மங்கல ஸ்வரூபியாயும், அருமைமிக்கப்பெருமாளாய் உலகத்தை காத்தருளும் பரப்ரஹ்மமேயுருவான பாண்டுரங்கனை வழிபடுகிறேன்
5
சரச்சந்த்ரபிம்பாநநம் சாருஹாஸம்
லஸத்ருண்டலாக்ராந்த கண்டஸ்தலாந்தம் !
ஜபா ராகபிம்பாதரம் கஞ்ஜநேத்ரம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!
லஸத்ருண்டலாக்ராந்த கண்டஸ்தலாந்தம் !
ஜபா ராகபிம்பாதரம் கஞ்ஜநேத்ரம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!
பொருள்: சரத்கால சந்திரன் போன்ற முகம், அதில் அழகிய புன்சிறிப்பு, பளபளக்கும் குண்டலங்கள் தொங்கும் கன்னம், செம்பருத்தை அல்லது கோவைப்பழம் போன்ற உதடு, செந்தாமரையத்த கண்கள் - இவை பாண்டுரங்கனின் அடையாளங்கள். அவர் உண்மையில் பரம்ரம்மஸ்வரூபி அவரை நான் ஸேவிக்கிறேன்
6
கிரீடோஜ்வலத்ஸர்வதிக் ப்ராந்தபாகம்
ஸுரைரர்சிதம் திவ்யரத்னை:அநர்கை: !
த்ரிபங்காக்ருதிம் பர்ஹமால்யாவதம்ஸம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!
ஸுரைரர்சிதம் திவ்யரத்னை:அநர்கை: !
த்ரிபங்காக்ருதிம் பர்ஹமால்யாவதம்ஸம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!
பொருள்: பத்து திசை மூலைகளிலும் பரவும் கிரீடப்ரகாச முள்ளவர். விலைமதிக்க முடியாத ரத்னங்களால் தேவர்கள் பாண்டுரங்கனை அர்ச்சிக்கின்றனர். மேலும் அவர் பற்பலவாகப் பரிணமிக்கும் வடிவங்கொண்டவர். மயில்தோகை, மாலைகள் இவற்றால் அலங்கரிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட பாண்டுரங்களை நான் ஸேவிக்கிறேன்
7
விபும் வேணுநாதம் சரந்தம் துரந்தம்
ஸ்வயம் லீலயா கோப வேஷம் ததாநம் !
கவாம் ப்ருந்தகானந்ததம் சாருஹாஸம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!
ஸ்வயம் லீலயா கோப வேஷம் ததாநம் !
கவாம் ப்ருந்தகானந்ததம் சாருஹாஸம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!
பொருள்: எங்கும் நிறைந்து எட்ட முடியாதவர். வேணுகானம் செய்யும் விளையாட்டு யாதவ வேஷம் பூண்டவர். இனிய புன்சிரிப்புடன் பசுக்கூட்டத்திற்கு ஆனந்தம் நல்குபவர். அப்படியான பரப்ரஹ்மஸ்வரூபி பாண்டுரங்கனை சேவிக்கிறேன்
8
அஜம் ருக்மிணீ ப்ராண ஸஞ்ஜீவனம் தம்
பரம் தாம கைவல்ய மேகம் துரீயம் !
ப்ரஸன்னம் ப்ரபந்நார்திஹம் தேவதேவம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!
பரம் தாம கைவல்ய மேகம் துரீயம் !
ப்ரஸன்னம் ப்ரபந்நார்திஹம் தேவதேவம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!
பொருள்: பிறப்பில்லாதவர் அவர், ருக்மிணியின் ப்ராணநாதராய், ஒன்றாய், துரீயமாய், பெரும் ஒளியாய், எப்பொழுதும் ப்ரஸன்னராய் சரணடைந்தவரின் துயரை நீக்குபவராய் தேவதேவராயும் திகழ்ந்த பரப்ரஹ்ம ஸ்வரூபியான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்
9
ஸ்தவம் பாண்டுரங்கஸ்ய வை புண்யதம் யே
படந்த்யேகசித்தேந பக்த்யா ச நித்யம் !
பவாம்போநிதிம் தேவி தீர்த்வாந்தகாலே
ஹரேராலயம் சாச்வதம் ப்ராப்னுவந்தி !!
படந்த்யேகசித்தேந பக்த்யா ச நித்யம் !
பவாம்போநிதிம் தேவி தீர்த்வாந்தகாலே
ஹரேராலயம் சாச்வதம் ப்ராப்னுவந்தி !!
பொருள்: புண்யமான இந்த பாண்டுரங்கனின் ஸ்தோத்திரத்தை எவரெவர் பக்தியுடனும் ஒரே மனதுடனும் படிக்கிறார்களோ அவரவர் ஸம்ஸாரமாகிய கடலைத் தரித்து கடைசீ காலத்தில் ஹரியின் அந்த சாச்வதமான இடத்தையே அடைவர்