உமாமஹேச்வர ஸ்தோத்ரம் 1 நம:சிவாப்யாம் நவயௌவநாப்யாம் பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்! நகேந்த்ரகன்யா வ்ருஷகேத நாப்யாம் நமோநம:சங்கர பார்வதீப்யாம்!!

உமாமஹேச்வர ஸ்தோத்ரம்

1.நம:சிவாப்யாம் நவயௌவநாப்யாம்

பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்!

நகேந்த்ரகன்யா வ்ருஷகேத நாப்யாம்

நமோநம:சங்கர பார்வதீப்யாம்!!

இளம் வாலிப வயதினராய் ஒருவரோடு ஒருவர் இணைந்து சிவனும், சிவைவுமாய், மலையரசன்மகளாயும், வ்ருஷப்க்கொடியோனாயும் காட்சி தரும் சங்கர-பார்வதீ தேவியாருக்கு நமஸ்காரம் நமஸ்காரம்.

2.நம:சிவாப்யாம் ஸரஸோத்ஸாவாப்யாம்

நமஸ்க்ருதா பீஷ்டவரப்ரதாப்யாம்!

நாராயணேநார்சித பாதுகாப்யாம்

நமோநம:சங்கர பார்வதீப்யாம் !!

சிவனும் சிவையுமாய் இனிய விழா கண்டு நமஸ்கரித்த பக்தர்களின் விருப்பப்படி வரமளித்து, நாராயணன்தானே அர்ச்சிக்கும் காலடிகளைக் கொண்டு காட்சிதரும் ஸ்ரீசங்கர பார்வதியருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

3.நம:சிவாப்யாம் வ்ருஷவாஹநாப்யாம்

விரிஞ்சி விஷ்ணு இந்த்ரஸுபூஜிதாப்யாம்

ஜம்பாகிமுக்யை ரவி வந்திதாப்யாம்

நமோநம:சங்கர பார்வதீப்யாம்!!

விருஷப வாஹனம் ஏறியவர்களும், பிரம்மா, விஷ்ணு, இந்திரன் ஆகியோரால் பூஜிக்கப்பட்டவர்களும், விபூதி, சந்தனம் பூசியவர்களும் ஆன ஸ்ரீசங்கர பார்வதியருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

4.நம:சிவாப்யாம் ஜகதீச்வராப்யாம்

ஜகத்பதிப்யாம் ஜயவிக்ரஹாப்யாம்!

ஜம்பாரிமுக்யை ரபி வந்திதாப்யாம்

நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

உலகத்தலைவர்களாயும், வெற்றியே வடிவமானவராயும், இந்திரன் முதலியோரால் போற்றப்பட்டவர்களுமான சங்கர-பார்வதியருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

5.நம:சிவாப்யாம் பரமௌஷதாப்யாம்

பஞ்சாக்ஷரீ பஞ்ஜரரஞ்ஜிதாப்யாம்!

ப்ரபஞ்ச ச்ருஷ்டிஸ்திதி-ஸம்ஹ்ருதாப்யாம்

நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

(சம்ஸார வியாதிக்கு) அருமருந்தானவர்களையும், பஞ்சாக்ஷரக்கூண்டில் விளையாடும் (கிளிகளாயும்) , இந்த உலகை சிருஷ்டித்தும், காத்தும், ஒடிக்கியும் நிலவுகின்ற சிவ பார்வதியருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

6.நம:சிவாப்யாமதிஸுந்தராப்யாம்

அத்யந்தமாஸக்ருதஹ்ருதம்புஜாப்யாம்!

அசேஷ லோகைக ஹிதங்கராப்யாம்

நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

மிக அழகிய தோற்றமுடைய சிவனும் சிவையும் தம்ஹ்ருதயத்தாமரைகள் மூலமும் மிகவும் ஒருங்கிணைந்துள்ளனர். அவர்கள் அனைத்துலகுக்கும் நன்மை செய்வதில் தமக்குத்தாமே நிகரானவர். அவர்களுக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

7.நம:சிவாப்யாம் கலிநாசனாப்யாம்

கங்கால கல்யாணவபுர்தராப்யாம்!

கைலாஸசைலஸ்தித தேவதாப்யாம்

நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

கலிதோஷம் நீங்கச் செய்வபராயும், எலும்பு மிளிரும் மங்கல சரீரம் கொண்டவரும், கைலாஸத்தில் வாசம் செய்யும் தேவதைகளுமான ஸ்ரீசங்கரபார்வதியருக்கு நமஸ்காரம் நமஸ்காரம்.

8.நம:சிவாப்யாம் அசுபாபஹாப்யாம்

அசேஷலோகைகவிசேஷிதாப்யாம்

அகுண்டிதாப்யாம் ஸ்ம்ருதி ஸம்ப்ருதாப்யாம்

நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

அமலங்களைப் போக்குபவரும், உலகமனைத்திலும் மேம்பட்டவரும், தடையில்லாதவரும், தியாயனத்தில் தேக்கப்பட்டவருமான சங்கரபார்வதியருக்கு நமஸ்காரம் நமஸ்காரம்.

9.நம:சிவாப்யாம் ரவ வாஹநாப்யாம்

ரவீந்து வைச்வாநரலோசனாப்யாம்!

ராகா சசாங்காப முகாம்புஜாப்யாம்

நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

பௌர்ணமி சந்திரன் போன்ற முகங்களுடனும், சூர்ய. சந்திர, அக்னியாகிய கண்களுடனும் தேரில் ஏறிச் செல்பவரான சங்கர-பார்வதியருக்கு நமஸ்காரம்.

10.நம:சிவாப்யாம் ஜடிலந்தராப்யாம்

ஜராம்ருதிப்யாம் ச விவர்ஜிதாப்யாம்!

ஜநார்தனாப்ஜோத்பவ பூஜிதாப்யாம்

நமோ நம:சங்கர பார்வதீப்யாம்

ஜடையணிந்து, மூப்பு, மரணமில்லாதவரும், விஷணு பிரம்ம தேவர்களால் வழிபட்டவருமான சங்கர பார்வதியருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

11.நம:சிவாப்யாம் விஷமேக்ஷணாப்யாம்

பில்வச்சதா மல்லிகதாமப்ருத்ப்யாம்!

சோபாவதீ சாந்தவதீச்வராப்யாம்

நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

மூன்று கண்கள் உடையவரையும், பில்வ இதழ் மல்லிகை மாலை இவற்றை தரித்தவரும், அழகு, அமைதி இவற்றன் நாயகர்களாகவும் திகழ்கின்ற சங்கர பார்வதியருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

12. நம:சிவாப்யாம் பசுபாலகாப்யாம்

ஜகத்த்ரயீ ரக்ஷண பத்தஹ்ருத்ப்யாம்!

ஸமஸ்ததேவாஸுர பூஜிதாப்யாம்

நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

ஜீவாத்மாக்களாகிய பசுக்களைப் பாதுகாப்பவரும், மூவுலகையும் காப்பதில் மனம் வைத்தவரும், அனைத்து தேவ, அசுரர்களாலும் போற்றப்பட்டவருமான சங்கரபாரவதியருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

13.ஸ்தோத்ரம் த்ரிஸந்த்யம் சிவபார்வதீப்யாம்

பக்த்யா படேத் த்வாதசகம் நரோ ய:

ஸ ஸர்வஸெளபாக்யபலாநி புங்க்தே

சதாயுரந்தே சிவலோக மேதி!!

சிவபார்வதீப்யாம் நம:என்ற தொடருடைய பன்னிரண்டு பத்யங்களைக் கொண்ட ஸ்தோத்திரத்தை மூன்று வேளைகளிலும் படிப்பவர் எல்லாவித ஸெளபாக்யங்களையும் அனுபவித்து, நூறாண்டுகள் வாழ்ந்து, முடிவில் சிவலோகம் எய்துவர்.

உமாமஹேச்வர ஸ்தோத்ரம் முற்றிற்று.