காயத்ரி உருவில் முருகனைக் காட்டும் பாடல் ’ஸவித்ரு, ஸவிதா’ என்ற பேரைப் போட்டிருப்பதில் ரொம்பவும் வைதிக விசேஷம் இருக்கிறது ஸுர்யனுக்கு எத்தனையோ பேர்

காயத்ரி உருவில் முருகனைக் காட்டும் பாடல்

’ஸவித்ரு, ஸவிதா’ என்ற பேரைப் போட்டிருப்பதில் ரொம்பவும் வைதிக விசேஷம் இருக்கிறது. ஸுர்யனுக்கு எத்தனையோ பேர் இருக்கிறது. ‘ஆதித்ய(ன்)-ஸவிதா-ஸுர்ய(ன்)-கக(ன்)-பூஷா’ இப்படியெல்லாம் பல பேர்கள் (’ஆதித்ய ஹ்ருதய’த்தில்) சொல்லியிருக்கிறது. பாஸ்கரன், பானு, மார்த்தாண்டன், திவாகரன், தினகரன், தினமணி, ரவி என்றெல்லாமும் பல பேர் இருக்கிறது. அவற்றில் ஸவிதா என்பதுதான் காயத்ரீ மந்த்ரத்திலேயே வருகிற பேர். அந்த மந்திரத்தில் பரமாத்மாவின் ஞான ஜ்யோதிஸ்ஸை ஸுர்ய மண்டலத்திற்குள் இருக்கும் தேஜஸ்ஸாக பாவித்து, ப்ரார்த்தித்து, அது நம் அறிவுச் சுடரையும் கொழுந்து விட்டெரியும்படி தூண்டிவிட வேண்டும் என்று சொல்லும்போது ஸவிதாவாகவே பேர் கொடுத்துச் சொல்லியிருக்கிறது. அந்தப் பேரின் விசேஷம் அது அழிவைச் சொல்லாமல் படைப்பைச் சொல்வது. ஸவிதா என்றால் உற்பத்தி செய்கிறவன், உண்டாக்குகிறவன். ‘ப்ரஸவம்’ என்ற வார்த்தையில் வரும் ‘ஸவ’த்தின் அடியாகப் பிறந்த வார்த்தை ஸவிதா. ஸுர்யன் இருட்டையும், சேற்றையும் சகதியையும், பூச்சிகளையும் அழிப்பது மட்டுமில்லை. அவனாலேயே மழை, தாவர வளர்ச்சி, நம் ஆரோக்ய வளர்ச்சி, ஆத்யாத்மிகமாக நம்முடைய புத்தி வளர்ச்சி எல்லாம் உண்டாகின்றன. அப்படியே ஸுப்ரஹ்மண்யரான ஞான ஸுர்யன் அஞ்ஞான இருட்டை அழிப்பது மட்டுமில்லை; அஞ்ஞானம் போனபின் எல்லாம் சூன்யமாகி விடுவதில்லை; அஞ்ஞானம் அழிந்த இடத்தில் பூர்ணாநுபவமான ஞான ப்ரகாசத்தை அவர் உண்டாக்குகிறார். ஸவிதா பத ப்ரயோகம் ரொம்பப் பொருத்தமாக விழுந்திருக்கிறது. திருமுருகாற்றுப்படையும் ஸுர்யோதயத்தை உவமை சொல்லித்தான் ஆரம்பிக்கிறது.

இந்த க்ருதியின் ஸாரமே வேத ஸாரமான காயத்ரி ஸ்வரூபமாக ஸ்வாமியைக் காட்டுவதுதான் என்று தோன்றுகிறது. ப்ரஹ்மண்யப் பேரோடுதான் பாட்டு ஆரம்பிக்கிறது? அப்புறம், அநுபல்லவியில் உச்சமான இடத்தில் (காயத்ரி மந்திரத்தில் வருகிற) ‘வரேண்ய’ சப்தம் வந்தது. அதே மாதிரி சரணத்தில் உச்சமான இடத்தில் ‘ஸவித்ரு’ சப்தத்தை வைத்திருக்கிறார். ஸாஹித்யத்திலே அந்த இடத்தில் ராக ஸஞ்சாரம் ஜிவ்வென்று மேலே போய் ‘ஸவித்ரே’ என்று பளிச்சென்று வருவது, அஞ்ஞான இருட்டு கும்மென்று பரவி நெரிக்கிற போது ஞான ஸுர்யோதயமாக, ஸ்வாமி பளிச்சென்று வந்து ரக்ஷிக்கிறது போன்ற அபிப்ராயத்தைக் கொடுக்கிறது. அப்புறம்,