விநாயகர் தகவல் மெகா கணபதிகள் 1 பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் 2 திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் 3 திருவலஞ்சுழி வெள்ளைப்

விநாயகர் தகவல்

மெகா கணபதிகள்

1. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்.

2. திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார்.

3. திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார்.

4. திருச்செட்டாங்குடி வாதாபி கணபதி.

5. செதலபதி ஆதி விநாயகர்.

1 . பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்

பிள்ளையார் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிள்ளையார்பட்டிதான். மருதங்குடி, திருவீங்கைக்குடி, ஈக்காட்டூர் என்றெல்லாம் அழைக்கப் பட்ட ஊர், பிள்ளையார் என்று 'ஜீங்'கென்று அமர்ந்தாரோ அன்று முதல் 'பிள்ளையார்- பட்டி' ஆகிவிட்டது. 'வாதாபி கணபதி'நம் ஊருக்கு வந்த கதை ஞாபகம் இருக்கிறதா? அதன் பிறகு நரசிம்ம வர்ம பல்லவன், தென்னாட்டை ஒரு சுற்றுலா அடித்தபோது, காரைக்குடி பக்கத்தில் இருந்த அழகானமலை கண்ணில் பட்டது. அவனால் அந்த மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டவர்தான் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர். இவரிடம் எதுவும் வேண்டிக் கொள்ளக்கூட வேண்டாம். அவரைச் சும்மா பார்த்தாலே போதும், உடம்பெல்லாம் சிலிர்த்துப் போகும். எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார் என்ற மனத் தெளிவு தானாய் வந்துவிடும்.இவர் வலம்புரி விநாயகர் எல்லா இடத்திலும் நான்கு கரங்களால் நான்கு திக்கையும் ஆட்சி செய்பவர், இங்கே இரண்டே திருக்கரங்களால் விண்ணையும், மண்ணையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வந்துவிடுகிறார். ஆயுதங்கள் எதுவும் இல்லாமல், அர்த்தபத்ம ஆசனத்தில் வலக்கரத்தில் கொழுக்கட்டையோடு, இடக்கையை இடையில் தாங்கி, பெருமிதமாய் பக்தர்களுக்கு அபயமளிக்கிறார். காரைக்குடி-திருப்பத்தூர் சாலையில் உள்ளது. பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவில்.

2. திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார்

பிள்ளையார் அன்பே உருவானவர், கருணைக் கடல், கேட்டதைத் தருபவர் என்பதெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால், இது என்ன பொல்லாப் பிள்ளையார்? நம் வீட்டுக் குழந்தை அதிசயமாக எதையாவது செய்துவிட்டால், "பொல்லாத பிள்ளையப்பா"என்று கொஞ்சுவதில்லையா?அதுபோல் குழந்தை ஒருவனுடன் இந்தப் பிள்ளையார் சரிசமமாய் நின்று, குழந்தை சொன்னதையெல்லாம் கேட்டதால் 'பொல்லாத பிள்ளையார்'என்று அழைக்கப்படுகிறார். தவிர, பொல்லாத - பொள்ளாத - என்றால் உளியால் செதுக்கப்படாத என்று அர்த்தம் இந்தப் பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றியவர், ஆதலாலும் பொல்லாத பிள்ளையார் என்று அழைக்கலாம். எல்லா ஊரிலும் பெரும் தொப்பையுடன் இருக்கும் பிள்ளையார், இங்கே ஒட்டிய வயிறுடன் காட்சியளிப்பது அதிசயமான ஒன்று. தமிழுக்காகவும், பக்தர்களுக்காகவும் ஒடியாடி உழைத்ததால் இப்படி ஆகிவிட்டாரோ என்னவோ?

அது என்ன ஊரின் பெயர் திருநாரையூர்?

மிருகண்டு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தபோது காந்தவர்மன் என்பவன் அதற்கு இடையூறு செய்தான். கோபம் கொண்ட முனிவர், அவனை 'நாரை'யாக மாறுமாறு சாபமிட்டுவிட்டார். அவன் சாப விமோசனம் கேட்டு கதறியழுதபோது, சௌந்தரேஸ்வரரை தினமும் காசி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யுமாறு முனிவர் கூறினார். அதுபோலவே செய்தது நாரை, ஒரு நாள், இறைவனின் சோதனையால் காசியிலிருந்து நீர் கொண்டு வரும்போது பெரும் மழை ஏற்பட்டது. அதனால், பறக்க முடியாமல் நாரை தவித்தது. அதன் சிறகுகள் ஒவ்வொன்றாக விழுந்தன. (அந்த இடம் சிறகிழந்த நல்லூர்) . சிறகுகள் இல்லாத நிலையில் நாரை தவழ்ந்து வந்து, சிவனை வழிபட்டு மோட்சம் பெற்றது. அதனால் அந்த ஊர் 'திருநாரையூர்'என்று அழைக்கப்படுகிறது. சிதம்பரத்திற்குத் தென்மேற்கே 20 A.e. தொலைவில், காட்டுமன்னார்குடி பாதையில் உள்ளது. பொல்லாப் பிள்ளையார் கோயில்.

3.திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார்

தேவேந்திரனால் பாற்கடல் நுரையால் செய்யப்பட்ட வெள்ளைப் பிள்ளையாரை நீங்கள் பார்க்க வேண்டுமா?

அந்த வெள்ளைப் பிள்ளையாரைத் தரிசிக்க திருவலஞ்சுழி சுவேத விநாயகர் ஆலயத்திற்கு போவோமா?

பிள்ளையார் வெள்ளையாக இருப்பதால், நானும் அப்படியிருக்கிறேன் என்று சொல்லுவது போல் வெள்ளைக் கோபுரம் நம்மை வரவேற்கிறது. உள்ளே சென்றால், சுவேத விக்னேஸ்வரர் எனப்படும் வெள்ளைப் பிள்ளையாரைச் சந்திக்கலாம். சிறிய வடிவம்தான் என்றாலும், தேவேந்திரனால் பூஜிக்கப்பட்டவராயிற்றே!தேவர்களுக்கு அமுதம் கிடைக்க வழிதந்தவர் ஆயிற்றே!வெள்ளைப் பிள்ளையாரைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் தோன்றும். அத்தனை தெய்வீகம்!கடல் நுரையால் செய்யப்பட்டதால், பிள்ளையார் தீண்டாத திருமேனி யாரும் தொடுவதில்லை, பச்சை கற்பூரம் மட்டும் சாத்துவார்கள். அதைத் தாண்டிச் சென்றால், பெரிய நாயகி அம்மன் சன்னதியையும், அஷ்டபுஜ மகாகாளியையும் தரிசிக்கலாம். பெரிய கோவில், அமைதியுடனும், அழகாகவும் காட்சியளிப்பதைக் காண கண்கோடி வேண்டும். பிள்ளையார் சதுர்த்தி அன்று, அல்லது எப்போது முடிகிறதோ அப்போது திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையாரைத் தரிசித்து விட்டு வாருங்கள்!அமிர்தமாக இருக்கும்.
தஞ்சை மாவட்டம் சுவாமி மலையிலிருந்து 2 A.e. தொலைவில் அமைந்துள்ளது. திருவலஞ்சுழி திருத்தலம்.


4.திருச்செங்காட்டங்குடி வாதாபி பிள்ளையார்.

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான், கஜமுகாசுரனை அழித்த ஊர் இது. அந்த அசுரனின் ரத்தம் படிந்து, இந்த ஊரே செங்காடாக மாறியதால் செங்காட்டாங்குடி என்ற பெயர் உருவானது. A.H. ஆறாம் நூற்றாண்டுக்க முன்பிருந்தே இந்தக் கோயில் வழிபடப் பட்டிருக்கிறது. முதலாம் ராஜராஜன் காலத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. சிறுத் தொண்டரான பரஞ்ஜோதி, பல்லவ மன்னனின் சேனாதிபதியாக வாதாபி சென்று சாளுக்கியரோடு போர் புரிந்து, வெற்றி வாகை சூடியபோது கொண்டு வந்த வாதாபி கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது இங்கேதான். பல்லவர் கால தெய்வீகக் கலைச் செல்வங்களான நவதாண்டவ மூர்த்திகளையும், துவார பாலகர்களையும் நீங்கள் காணவேண்டுமென்றால் இந்த ஊருக்குத்தான் வரவேண்டும். இறைவன் உத்திராபதீஸ்வரர், சிறுத் தொண்டருக்கு அருள் புரிந்த பைரவ வேடத்திலேயே காட்சி தருகிறார். அந்த சிலையைப் பார்க்கவே வித்தியாசமாயிருக்கும்.
வாதாபி கணபதியும் அவரது தந்தையும் அருள்புரியும் திருச் செங்காட்டங்குடிக்கு நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்?

நாகை மாவட்டம் நன்னிலத்திருந்து 9 A.e. தொலைவில் உள்ளது. சிருச்செங்காட்டாங்குடி திருத்தலம்.


5.செதலபதி ஆதி விநாயகர்

இத்தலத்து நாயகனின் பெயர் முக்தீஸ்வரர். இவரை வழிபட்டால் முக்தி நிச்சயம் என்கிறார்கள். செதலபதி ஆலயத்தின் மற்றொரு சிறப்பு. கோயில் வாசலில் வீற்றிருக்கும் ஆதி விநாயகர் என்பதால் மனித உருவத்தில் காட்சியளிக்கிறார். முருகப் பெருமானுக்கு அவரைப் போன்றே ஒரு அண்ணா இருந்தால் எத்தனை அழகாக இருப்பாரோ, அத்தனை அழகாக இருப்பாரோ. அத்தனை அழகாகக் காட்சியளிக்கிறார் ஆதி விநாயகர். குரு பகவான் தட்சணாமூர்த்தியும் இங்கே வித்தியாசமாக இருக்கிறார். காலால் அசுரனை மிதித்தபடி, தன் இரண்டு பக்கம் அணில்கள் இருக்க, சனகாதி முனிவர்கள் நால்வரும் அருகில் தவம் செய்யக் காட்சியளிக்கிறார் குரு. இன்றும் திலரைப்படி பாவங்களை நீக்கிச் சித்திகளை அளிக்கும் தலமாக விளங்கி வருகிறது. மயிலாடுதுறை - திருவாரூர் பாதையில், பூந்தோட்டத்தில் இருந்து 2 A.e. தொலைவில் உள்ளது.


கணபதி ஹோமம்

முழு முதற்கடவுளான கணபதி தெய்வங்களிலேயே சிறந்தவர். எதிலும் முதலில் பூஜிக்க வேண்டியவர். வழிபாட்டு முறையில், கணபதி ஹோமம் மிகச் சிறந்தது. இது, கணபதி ஹோமம் மிகச்சிறந்தது. இது, கணபதி உபநிஷத்தில் விரிவாய் சொல்லப்பட்டிருக்கிறது. யோ மோதக ஸஹஸ்ரேண யஜதே, ஸவாஞ்சித பலவமாப் நோதி ஆயிரம் கொழுக்கட்டைகள் ஹோமம் செய்தால் நினைத்ததை எல்லாம் அடையலாம். நெல் பொரியால் ஹோமம் செய்தால் புகழ் பெறுவான். எளிதில் கிடைக்கும் அருகம்புல்லால் ஹோமம் செய்தால் துயரங்களிலிருந்து விடுபடுவான். கணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு அவை : மோதகம் என்னும் கொழுக்கட்டை, அவல், நெல்பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத்தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இவை தவிர அருகம்புல், நெய், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம், இவைகளையும் ஹோம நிவேதனமாகச் செய்யலாம். எட்டுப் பேரைக் கொண்டு ஹோமம் செய்தால் சூரியனுக்கு ஒப்பான ஒளியைப் பெறுவான். சந்திரனில் நான்காம் பிறையை பார்க்கக் கூடாது, பழிகள் ஏற்படும். கிருஷ்ணன் ஒருமுறை நான்காம் பிறையைப் பார்த்துவிட்டதாலேயே ஸ்யமந்தக மணியை அபகரித்துக் கொண்ட பழி ஏற்பட்டது. அதை போக்கிக் கொள்ள கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் பகலில் ஒன்றும் சாப்பிடாமலிருந்து மாலையில் விநாயகரை பூஜித்து பழிநீங்கப் பெற்றார் என்று பாகவதம் கூறுகிறது. பிரும்மாண்ட புராணம். லலிதோபாக்யானம் என்னும் நாலில், தடை செய்யும் யந்திரத்தை சக்தி ஸைன்யங்கள் நடுவில் அரக்கர்கள் போட்டுவிட்டனர். அம்பிகையின் படையினர் செயலற்றுவிட்டனர். உடன் அம்பிகை, முக்கண்ணனைப் பார்த்த மாத்திரத்தில், யானைமுகத்தோன் தோன்றி தடையந்திரத்தை முறித்தெறிந்து அம்மாள் படைகளுக்கு வெற்றி வாங்கிக் கொடுத்தார் என்றிருக்கிறது. கணபதி ஹோமம், மிகச் சிறிய முறையிலும் பெரிய அளவிலும் செய்யலாம். அவரவர் சக்திக்கேற்றபடி செய்வதை கணபதி அன்புடன் ஏற்றுக்கொண்டு அருள் புரிகிறார். அவருக்கு "த்வைமாதுரர்"என்ற பெயர் உண்டு. உமாதேவியும், முக்கண்ணனின் முடியிலுள்ள கங்கையும் ஆக இரண்டு பேருமே அவர் தாயார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. கணபதி ஹோம முறை, கணபதி உபநிஷத்திலும் மற்றும் "வாஞ்சாகல்பதா"என்ற ஒரு பெரிய ஹோம முறையிலும் விரிவாய் சொல்லப்பட்டிருக்கிறது. கணபதி ஹோமம் செய்வதால், தடைகள் நீங்கி மேன்மை பெறலாம்.


மகாராஷ்ட்ராவில் மகா கணபதி

இந்தியாவில் விநாயகர் வழிபாட்டில் முதலிடம் வகிப்பது மகாராஷ்ட்ரம். பிற மாநிலங்களை விட விநாயகர் அங்கு வெகுசிறப்பாக வழிபடப் பெறுகிறார். 'கணபதியப்பா'என்னும் பெயரில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அம்மாநிலத்தில் முன்பு அரசு செலுத்திய பேஷ்வாக்கள் விநாயகரைத் தம் குலதெய்வமாகும், போரில் வெற்றியைத் தரும் கடவுளாகவும் கருதி வழிபட்டு வந்தனர். 'தானே'மாவட்டத்தில் 'தித்துவானா'என்னும் நகரிலும், 'கொலபா'மாவட்டத்தில் உள்ள 'மாத்துபாலி' என்னும் நகரிலும் விநாயகருக்கு பெரிய கோவில்கள் உள்ளன. மகாராஷ்ட்ர மக்கள் கல்விக்குரிய தெய்வமாய் விநாயகரை வழிபடுகின்றனர். அவர்கள் செவ்வாய்கிழமையை கணபதிக்கு உகந்த நாளாக எண்ணி அந்நாளில்கோவில்களுக்குத் திரளாகச் சென்று வழிபடுகின்றனர். விநாயகர் சதுர்த்தி அன்று, அவரது திருவுருவச் சிலையை மண்ணால் செய்து, ஒவ்வொரு வீதியிலும் ¢ 11 நாட்கள் வரை விநாயகர் வைக்கப்பட்டிருப்பார். விதவிதமான பிள்ளையார்களைத் தெருவில் வைத்து ஆடல், பாடலுடன் 'கணபதியப்பா மோரியா'என்று பக்தர்கள் கூவுவர். அவர்கள் சிவப்பு வர்ண உடையை உடுத்திக் கொள்வர். பிள்ளையாரை மேளதாளங்களுடன் iF வழியே எடுத்துச் சென்று கடல், ஆறு, குளம் போன்றவற்றில் கரைத்து விடுவர். இவ்விழா மிக விமரிசையாக இப்போதும் நடைபெற்று வருகிறது. சிற்பிக் கலையில் உலகப் புகழ் பெற்ற எல்லோரா குன்று, மஹாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ளது. அக்குன்றில், பற்பல அரசர்கள் பல்வேறு காலங்களில் உருவாக்கிய குடைவரைக் கோவில்கள் மிகுதியாய்க் காணப்படுகின்றன. அவற்றுள், ராஷ்சிரகூட அரசனான முதலாம் கிருஷ்ணன் என்பவர் கயிலாச நாதருக்கு எடுத்த கோவில், பிரசித்தமானது. அக்கோவிலின் சுற்று மண்டபத்தில் உமை, முருகன் போன்ற தெய்வங்களோடு பிள்ளையாருக்கும் சந்நதி உள்ளது. இப்பிள்ளையார் திருஉருவம் யானை முகத்துடன் குள்ளமான உருவில் அமைந்துள்ளது. வெளிநாட்டினர் இவரை மிகவும் வியப்போடும் பக்தியோடும் நோக்குகின்றனர்.

விநாயகரை வழிபட பதினாறு மந்திரங்கள்

ஒம் என்ற சிறப்பான பிரணவத்திற்கு கணபதியே தலைவர். விநாயகரை குறிப்பாக பதினாறு மந்திரங்களைச் சொல்லி வழிபடுதல் சிறப்பு. அவை:

ஒம் சுமுகாய நம:

ஒம் ஏக தந்தாய நம:

ஒம் கபிலாய நம:

ஒம் கஜகர்ணிகாய நம:

ஒம் விகடாய நம:

ஒம் விக்னராஜாய நம:

ஒம் கணாதிபாய நம:

ஒம் தூமகேதுவே நம:

ஒம் கணாத்யக்ஷ£ய நம:

ஒம் பாலசந்த்ராய நம:

ஒம் கஜாநநாய நம:

ஒம் வக்ரதுண்டாய நம:

ஒம் சூர்ப்பகர்ணாய நம:

ஒம் ஹேரம்பாய நம:

ஒம் ஸ்கந்த பூர்வஜாய நம:

விநாயகப் பெருமானை இந்தப் பதினாறு மந்திரங்களால் வழிபட்டால் பெருமானது அருள் பூர்ணமாகக் கிடைக்கும்.

அபீஷ்ட வரத கணபதி

ஸ்ரீ அபீஷ்ட வரத மஹாகணபதி திருவையாறு மேட்டுத் தெருவில் கோவில் கொண்டுள்ளார். திருவையாறு வழியாக வந்த காவேரி அவ்வூரின் அழகு கண்டு அங்கேயே தங்கிவிட, அபீஷ்ட வரத மஹாகணபதியை பூஜித்தே சமுத்திரராஜன் திருமணத்தை நடத்தி வைத்தவர் என்பதால், இக் கணபதியை தரிசித்தால் திருமணத் தடை நீங்கி விடும் என்பது நம்பிக்கை. இத்திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ள திருக்குளத்தில் மூழ்கி எழுந்த பின்தான் அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் திருகைலாயக் காட்சி கொடுத்தார் என்று தலபுராணம் கூறுகிறது.

கச்சேரி விநாயகர்

காஞ்சிபுரம் மாவட்டம்,மதுராந்தகத்திலிருந்து 26 A.e. தொலைவில் உள்ளது சேயூர். இங்கே, பேருந்து நிலையத்தின் அருகே அமைந்துள்ள விநாயகர், கச்சேரி விநாயகர் எனும் வித்தியாசமான பெயர் கொண்டவர். அருகே காவல் நிலையம் இருப்பதும் (காவல் நிலையத்தை கச்சேரி என்பது பழைய வழக்கம்) ஒரு புறமாக சற்றே சாய்ந்து தாளம் போடுவது போன்ற பாவனையுடன் இவர் காணப்படுவதும், இவரது பெயருக்குக் காரணமாய்க் கூறப்படுகிறது. கோடை அபிஷேகம் என்ற பெயரில் சித்திரை மாதம் முழுவதும், தினசரி இளநீர் அபிஷேகமும் தயிர்க்காப்பும் சாத்தப் பெற்று குளுகுளுவென்று காட்சியளிப்பார் இவ்விநாயகர்.

சிலம்பணி விநாயகர்

தேவகோட்டையில் உள்ள ஆலயம் ஒன்றில் விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவரைச் சிலம்பணி விநாயகர் என்றழைக்கின்றனர்.

சர்ப்ப விநாயகர்

சர்ப்ப விநாயகர், பாப நாசம் திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவரது உடல் முழுவதும் சர்ப்பங்கள் அணி செய்கின்றன. இராகு, கேது தோஷங்களிலிருந்து விடுபட இவரை வணங்கி அருள் பெறலாம் என்று கூறப்படுகிறது.

அவரவர் நட்சத்திரத்திற்கேற்ப ஆனைமுகனை அலங்கரிக்க

அஸ்வினி - வெள்ளிக்கலசம், தங்கக் கிரீடம் அறுகம்புல் மாலை.

பரணி - சந்தன அலங்காரம், தங்கக் கிரீடம்.

கிருத்திகை - வெள்ளிக் கவசம், தங்கக் கிரீடம்.

ரோகினி - சந்தன அலங்காரம், தங்கக் கிரீடம்.

மிருகசீரிஷம் - கஸ்தூரி மஞ்சள் அலங்காரம், அறுகம்புல் மாலை.

திருவாதிரை - தங்கக் கிரீடம், அறுகம்புல் மாலை.

புனர்பூசம் - சந்தன அலங்காரம், அறுகம்புல் மாலை.

பூசம் - கஸ்தூரி மஞ்சள், தங்கக் கிரீடம், அன்னம்.

உத்திரம் - திருநீறு அலங்காரம், அருகம்புல் மாலை.

ஹஸ்தம் - சந்தன அலங்காரம், அருகம்புல் மாலை.

சித்திரை - வெள்ளி கவசம், அறுகம்புல் மாலை.

சுவாதி - தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை.

விசாகம்- திருநீறு அலங்காரம்.

அனுஷம்- கஸ்தூரி மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அறுகம்புல் மாலை, ரோஜா மாலை.

கேட்டை - தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம், அறுகம்புல் மாலை.

மூலம் - சந்தன அலங்காரம், அறுகம்புல் மாலை.

பூராடம்- தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம், அறுகம்புல் மாலை.

உத்திராடம்- அறுகம்புல் மாலை.

திருவோணம்- சுவர்ணம், அறுகம்புல் மாலை.

அவிட்டம் - மலர் அலங்காரம், வெள்ளிக் கவசம்.

சதயம் - குங்கும அலங்காரம், வெள்ளிக் கவசம்.

பூரட்டாதி- தங்கக் கிரீடம், அன்னம், அருகம்புல் மாலை.

உத்திரட்டாதி- ரோஜா மாலை அலங்காரம்.

ரேவதி- வெள்ளிக் கவசம், மலர் அலங்காரம், அருகம்புல் மாலை.

உலக விநாயகர்

மதுரை கே. புதூர் உலகநாதன் சேர்வை தெருவில் அமைந்துள்ளார். இந்த விநாயகரின் திருநாமம் உலகம் என்ற சொல்லை ஏற்றிருப்பதால் மக்கள் அனைவருக்கும் மகத்தான சக்தியை அளித்து வருகிறார். தேர்வுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள், வேலை தேடிச்சேல்லும் இளைய சமூகத்தினர் வயதானோர், திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் ஆகியோர், இவரை வணங்கிச் சென்றால், அவர்கள் எண்ணம் நிறைவேற பரிபூரண ஆசி வழங்கி, சிறப்பான வாழ்கை அமைய அருள் புரிகிறார். ' உலக வினாயகர்'.

சித்தி அரசு விநாயகர்

சித்தத்தில் எண்ணியதை நிறைவேற்றி வைத்திடும் 'சித்தி அரசு விநாயகர்' அமைந்திருப்பது, வேதாரண்யம் தலத்திற்கு மேற்கே 8 A.e. தொலைவில் உள்ள, குரவப்புலம் எனும் கிராமத்தில்.

அம்மையாரின் அருட்கோலக் காட்சியாய் விளங்கும் லிங்கவடிவ ஆலயத்துள் அமைந்திருக்கிறார் இந்த விநாயகர். சங்கடங்கள் தீர்த்திட இவரது சன்னதிக்கு செல்வோர், தாங்களே இவருக்கு பூஜை செய்யலாம். இக்கோயில் வலம் வந்திட, உமாபதியோடு, கணபதியையும், வலம வந்த பலன்கிட்டும் என்கின்றணர்.

குழந்தை விநாயகர்

தவழும் கண்ணனைப் போல தவழும் விநாயகர் அமைந்திருப்பது, வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில், இங்கு துதிக்கையில் கொழுக்கட்டையுடன், தவழ்ந்தபடியே பின்புறம் திரும்பிப் பார்க்கும் கோலத்தில் அமைந்துள்ளார் விநாயகர்.

வியாக்ர சக்தி விநாயகர்

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் துவஜஸ்தம்பத்தைச் சுற்றியுள்ள தூண்களுல் ஒன்றில், விநாயகரின் விசித்திரமான உருவம் அமைக்கப்பட்டுள்ளது. முகம் யானை முகமாகவும் கழுத்திலிருந்து இடுப்பு வரை அழகிய பெண் உருவாகவும், இடுப்பிற்குக் கீழே உள்ள பகுதி புலியின் தோற்றமாகவும் காணப்படும் இவ்விநாயகரை, வியாக்ர சக்தி விநாயகர் என அழைக்கின்றனர்.

சுயம்பு விநாயகர்கள்

வேலூர் அருகேயுள்ள சேண்பாக்கத்தில் செல்வ விநாயகர் ஆலயத்தில் பதினொரு சுயம்பு கணபதிகள் அமைந்துள்ளனர். ஒம்கார வடிவில் அமைந்துள்ள இவ்விநாயகர்கள், விநாயகருக்கு உரிய முழு வடிவில் இல்லாது, உருண்டையான கல் உருவிலேயே அமைந்துள்ளனர். இவ்வாலயத்தில் தீட்டப்பட்டுள்ள ஒவிய வடிவில் இவ்விநாயகர்களின் பெயர்கள் 1. பாலகணபதி, 2. நடன கணபதி, 3. கற்பக கணபதி,
4. ஒங்கார கணபதி, 5. சிந்தாமணி கணபதி, 6. செல்வகணபதி, 7. மயூரகணபதி, 8. மூஷிக கணபதி, 9. வல்லப கணபதி, 10. சித்திபுத்தி கணபதி, 11. ஐம்முக கணபதி.


கேது தோஷம் நீக்கும் விநாயகர்

ஜோதிட ரீதியாக கேது ஒரு ஞான கிரகம். தத்துவ ஞானிகளையும், மஹான்களையும் உருவாக்குபவர் கேது. பாம்பு உருவம் பெற்ற கேது. ஒரு சமயம், பிள்ளையாரைப் பிடிக்கப் போனார். சூரியனையே பிடித்துவிட்ட எனக்கு இந்த பிள்ளையார் எம்மாத்திரம்?என்று இறுமாப்புடன் சென்ற அவரைப் பூணூலாக அணிந்து கொண்டார் பிள்ளையார். ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், திங்கட்கிழமைதோறும் பிள்ளையாரை வழிபடுவது நல்லது. இதன் மூலம் கேதுவினால், வரக்கூடிய மாங்கல்ய தோஷம், புத்திரதோஷத்தையும் பிள்ளையார் அகற்றுவார் என்கிறது ஜோதிட சாஸ்திரம். கேதுவை மோட்சகாரகன் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஞானத்தின் வடிவமான பிள்ளையாரை வழிபடுவதன் மூலம் அவரது அருளால் கேது தோஷம் நீங்கி மோட்சம் கிடைக்கும்.

இடுக்குப் பிள்ளையார்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், குபேரலிங்கத்தை அடுத்து இடுக்குப் பிள்ளையார் சன்னதி உள்ளது. அந்த மண்டபத்தில் மூன்று யந்திரங்களை பிரதிஷ்டை செய்துள்ளார் இடைக்காட்டுச் சித்தர். அந்த சந்நதி நாம் படுத்தநிலையில் ஊர்ந்து செல்லும்படியாக உள்ளது. அப்படிச் செல்லும்போது சித்தர் அமைத்த யந்திரங்கள் நம ¢உடலில் படுகின்றன. அவற்றிலிருந்து ஆகர்ஷண சக்தி உடலில் பரவி நரம்பு வியாதிகள் குணமாகிவிடும் என்கின்றனர். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகள் இருப்பின் நிவர்த்தி ஆகும் என்று நம்பிக்கை கொண்டு வழிபடுகிறார்கள். இடுக்குப் பிள்ளையாரை எத்தனை முறை நுழைந்து தரிசித்து வெளி வருகிறோமோ அத்தனை பிறவிகள் குறையும் என்றும் கூறப்படுகிறது.

விநாயகரின் வினோதப் பெயர்கள்

திருக்கச்சூர் - கருக்கடி விநாயகர்

திருமுருகன்பூண்டி - கூப்பிடுபிள்ளையார்

கொட்டையூர் - கோடி விநாயகர்

திருப்பனையூர் - துணையிருந்த பிள்ளையார்

திருவிழிமலை - படிக்காசு விநாயகர்

நாகப்பட்டினம் - மாவடிப் பிள்ளையார்

திருநெல்வேலி - சந்திப்பிள்ளையார்

ஸ்ரீவைகுண்டம் - தூண்டில் விநாயகர்

குன்றக்குடி - தோகையடி விநாயகர்

ஸ்ரீ பெரும்புதூர் - வழித்துணை விநாயகர்

பழநி - கோசல விநாயகர்

சிவகங்கை - கௌரி விநாயகர்

மயிலாடுதுறை - அகத்திய விநாயகர்

தென்காசி - அணுக்கை பிள்ளையார்

செங்கோட்டை - ஆதிசூர விநாயகர்

திருவிதாங்கோடு - உமை அர்தபாக விநாயகர்

திருவாதவூர் - கபில விநாயகர்

வயலூர் - கீழைப் பிள்ளையார்

சுசீந்திரம் - உதயமார்த்தாண்ட விநாயகர்

வடசேரி - ஆகசாலை விநாயகர்

பயபத்திடேட்டா

திருநாமம் : பிள்ளையார் (நிரந்தர முதல்வர்)

பிறந்தநாள் : ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தி,

பெற்றோர் : பரமசிவன், பார்வதி

(மூலப் பொருளின் மூலமானவர்கள்)

சகோதரர்கள் : முருகன், ஐயப்பன்

( இருவரும் அப்பா பிள்ளைகள், விநாயகர் அம்மா பையன்)

மனைவியர் : கிரியாசக்தியான சித்தி, இச்சா சக்தியான புத்தி, ஞான சக்தியான வல்லபை (இவர்கள் தவிர மஹாவிஷ்ணுவின் புதல்வியரான, மோதை, பிரமோதை, சுமநசை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருஹாசை, சுமத்யமை, நந்தினி, சாமதை எனும் பன்னிருவரும் கூட கணபதியின் மனைவியரே ! )

மகன்கள் : க்ஷேமம், லாபம் (சித்ராங்கதன், புத்திராங்கதன் என்ற பெயர்களும் உண்டு)

மாமன் : மஹாவிஷ்ணு !

இருப்பிடம் : கரும்புச்சாறால் சூழப்பட்டதும், கயிலாயத்தின் ஒரு பகுதியுமான ஆனந்த புவனம் (குளக்கரை, மரத்தடி, முச்சந்தியும் கூட உறைவிடங்களே ! )

வாகனம் : கிருதயுகத்தில் சிங்கம், திரேதாயுகத்தில் மயில், துவாபர யுகத்தில் மூஞ்சூறு, கலியுகத்தில் குதிரை)

பிடித்த கனி : மாம்பழம் (அன்னையும் தந்தையும் உலகத்திற்கு சமமானவர்கள் என உணர்த்திப் பெற்றது.

பிடித்த பலகாரம் : கொழுக்கட்டை (பிடித்து வைக்கப்படுபவர்க்குப் பிடித்த பலகாரமும் பிடித்து வைக்கப்படுவது)

ஒடித்தது : தந்தம் (பாரதம் எழுதவும், கஜமுகனை அழிக்கவும் )

கொடுத்தது : காவேரி (தமிழகத்திற்காக அன்றே திறந்துவிடப்பட்ட ஆறு)

அருளியது : ஒளவைக்கு, அகத்தியருக்கு, அடியார்களுக்கு.

அழித்தது : ஆணவம், கன்மம், மாயை நிறைந்த அசுரர்களை.

அவதார நோக்கம் : தன்னை நினைத்து தொடங்கும் செயல்களில் குறுக்கிடும் தடைகளைத் தகர்த்து எண்ணிய எண்ணம் ஈடேற அருளுதல்.

* சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் கணேசரின் முன் காளை வாகனம் காணப்படுகிறது.

* திருமாலின் உறைவிடம் பாற்கடல் ! கணபதியின் உறைவிடத்தைச் சுற்றியிருப்பது கருப்பஞ்சாறு கடல்.

* ஆதிசங்கரர் கணேச பஞ்சரத்நத்தை எழுதியது திருவானைக்காவில் உள்ள விநாயகர் சன்னதியில்.

* கோவையிலுள்ள ஒரு விநாயகரின் பெயர் டிரான்ஸ்பர் விநாயகர்.

* சிவசக்தியருக்கு இடையே அமைந்த சோமகணபதி மூர்த்தம் தேனம்பாக்கத்தில் உள்ளது.

* மீனாட்சியம்மன் ஆலயத்தில் 108 விநாயகர் திருவுருவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

* மங்கோலியர்கள் விநாயகரை தோத்கார் அவுன்காரகன் என்றழைக்கின்றனர்.

* ஆனைமுகனின் உறைவிடம் கயிலையின் ஒரு பகுதியான ஆனந்தபுவனம்.

* கணபதிக்கு திபத்தியர்கள் வைத்துள்ள பெயர் ட்ஸோக்ப்டாக்.

* திருவண்ணாமலை ஆலய நுழைவாயிலில் உள்ள விநாயகரின் பெயர் அல்லல் தீர்க்கும் பிள்ளையார்.

* சதுர்த்தியன்று மட்டுமே விநாயகரை துளசியால் பூஜிக்கலாம்.

* உத்திராட நட்சத்திரத்தின் அதிதேவதை கணபதி.

* ஜாவா தீவில் விநாயகர் கபால மாலையணிந்து காணப்படுகிறார்.

* பர்மாவில் கணபதி மகாபைனி என்றழைக்கப்படுகிறார்.

* அருணகிரிநாதர் விநாயகரை ஐந்துகரப் பண்டிதன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

* திருச்சி உச்சிப்பிள்ளையார் தலையில் விபீஷணன் குட்டிய வடு இன்னும் காணப்படுகிறதாம்.

* முக்குறுணி விநாயகருக்குரிய மோதகம் செய்யப்படுவது 24 படி அரிசியால்.

* ஆந்திரா ஸ்ரீ சைலத்தில் கணபதி கையில் புல்லாங்குழலுடன் காணப்படுகிறார்.

* திருப்பரங்குன்க்குறத்தில் கரும்பு வில் தாங்கிய கற்பக விநாயகர் காட்சியளிக்கின்றார்.

* ப்ராஹ்கெனேஸ் என்பது, கம்போடியாவில் கணேசருக்கு வழங்கும் பெயர்.