கட்டுரைகள் - ஜபத்தின் மஹிமை

ஜபத்தின் மஹிமை

ஜபத்தின் மஹிமைய நன்றாக அறிந்தவர் வஸிஷ்டர். ஸ்ரீராமாயணத்தில் 'வஸிஷ்டம் ஜபதாம் வரம்'என்று ஜபம் செய்கிறவர்களில் சிரேஷ்டர் அவர்தாம் என்று சொல்லியிருக்கிறது. மகாபாரதத்தில் ஜபம் செய்கிறவர்களின் கதி என்ன என்று யுதிஷ்டிரர் கேட்க, பீஷ்மர் சொல்கிறார்- ''ஆசமனம் பிராணாயாமம் அங்கந்யாஸம் முதலிய அங்கங்களின்றி ஜபம் செய்கிறவன், சிரத்தையில்லாமலும் ஸந்தோஷமில்லாமலும் ஜபிக்கிறவன், அகங்காரமுடையவன் இவர்கள் நரகம் செல்வர். எந்த விஷயத்தில் அவனுக்கு ஆசை விழுகிறதோ அதில் பிறப்பான். சஞ்சல புத்தியுடன் செய்பவன் சஞ்சல கதியடைவான். ஹடத்தால் ஜபிப்பவனும் நல்ல கதியடையான் நரகத்தையே அடைவான். காமகாமியாக இருந்து பிரணவத்தை ஜபம் செய்தவனும் நரகத்துக்கே போவான்''என்கிறார்.

இவரிடம், ''நரகம் என்றால் என்ன?''என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறார்- தேவர்களுடைய ஸ்தானங்கள், திவ்ய விமானங்கள், தேவ ஸபைகள், தேவலோகத்திய உத்தியானங்கள், விளையாட்டுப் பூமிகள், தாமரையோடைகள், இந்திரன், ப்ருகஸ்பதி, மருத், விச்வதேவர், ஸாத்யர், வஸு ருத்ர ஆதித்யர் இவர்களுடைய லோகமும் நரகம்தான். பரமாத்மாவின் ஸ்தானம் அதாவது ஸ்வரூபம் ஒன்றே பயமற்றது;அவித்யாதி க்லேசமற்றது. ப்ரியம், அப்ரியம் முக்குணங்கள் அற்றது லிங்கசரீரமற்றது;அறிபவன் அறிவு அறியப்படுவது என்ற திரிபுடி அற்றது;ஸுகதுக்கமற்றது. அதுவே நித்ய ஸுகம். அதை அபேக்ஷித்து, தேவலோகங்கள் நரகமாகும். ஆகவே சாஸ்திரப்படி ஜபம் செய்பவனுக்கு மோக்ஷமும், விதிக்கு மாறுபாடாகியோ, பலகாமனையாலோ ஜபம் செய்பவனுக்குத் தேவாதிலோகப் பிராப்தியும் கிடைக்கும் என்று ஏற்பட்டது.

பின் யுதிஷ்டிரர் காலம், யமன், மிருத்யு இவர்களுடைய ஜப விஷயமான ஸம்வாதத்தைக் கேட்க, பீஷ்மர் சொல்கிறார்- இக்ஷ்வாகு, பிராம்மணன், காலம், யமன் இவர்களின் வரலாற்றைச் சொல்கிறேன் கேள். ஒரு காலத்தில் வேத வேதாங்கங்களை அறிந்த மகாபுத்திமானான ஒரு பிராம்மணன் இருந்தான். அவன் தவம் புரிந்துகொண்டு ஆயிரம் வருஷங்கள் வேதமாதாவான காயத்ரீயை ஜபம் செய்தான். கடைசியில் காயத்ரீதேவி அவனுக்குப் பிரத்தியக்ஷமானாள். அவனோ ஜபத்தையே செய்துகொண்டு தேவியிடம் ஒன்றும் பேசவில்லை. தேவி அவனிடம் கருணை கொண்டாள். அவன் ஜபத்தை முடித்துக்கொண்டு தேவியின் காலில் விழுந்து, ''எனது பாக்கியத்தால் c பிரஸாதத்தை அடைந்தாய். எனக்கு எப்பொழுதும் ஜபத்தில் மனம் ரமிக்கும்படி அநுக்கிரகிக்க வேண்டும்''என்றான். தேவி, ''பிரம்மரிஷே!உனக்கு வேண்டிய வரத்தைக் கேட்டுக்கொள்''என்றாள். பிராம்மணன், ''எனக்கு ஜபத்தில் ஆசை வளரட்டும்;மனம் எப்போதும் ஸமாதியில் லயிக்கட்டும்''என்று வேண்டினான். ''அப்படியே ஆகட்டும். c ஒருபோதும் நரகம் அடையமாட்டாய். பிரம்மாவின் ஸ்நானத்தையே அடைவாய். காலம், ம்ருத்யு, யமன் இவர்களுடன் உனக்கு வாதம் ஏற்படும்''என்று உரைத்துத் தேவி மறைந்தாள்.

பிராம்மணன் காம க்ரோதாதிகளை ஜயித்து ஸத்யஸந்தனாக மறுபடியும் நூறு வருஷம் தவம் செய்தான். அதன் பிறகு தர்மதேவதை நேராகத் தோன்றி, ''பிரம்மணா, நான் தர்மதேவதை. இந்த ஜபத்தின் பயனாக c ஸத்ய லோகத்தை ஸம்பாதித்திருக்கிறாய். உடனே பிராணனை விட்டு சரீரத்தையும் விட்டு அந்த லோகங்களை அடைவாயாக''என்றது.

பிராம்மணன் :- தர்மமே, எனக்கு லோகம் எதற்கு?துக்க ஸுக ஸம்பந்தமுள்ள தேகத்தை மறுபடியும் அடைய மாட்டேன். நேராக மோக்ஷம் போவேன். c செல்வாயாக.

தர்மம் :- c அவசியமாகச் சரீரத்தை விட வேண்டும். ஆகவே ஸ்வர்க்கத்துக்குப் போ.

பிராம்மணன் :- தேகமில்லாமல் ஸ்வர்க்கத்தையும் நான் இச்சிக்கவில்லை. ஆதலால் எனக்கு ஸ்வர்க்கம் வேண்டாம்.

தர்மம் :- தேகத்தில் ஆஸ்தையை விடு. தேகத்தை விட்டு, ரஜஸ் இல்லாத லோகத்துக்குச் செல்.

பிராம்மணன் :- ஜபத்தில் ரமிக்கிறேன். அந்த ஸநாதன உலகங்கள் எனக்கு வேண்டாம். சரீரத்துடன் ஸ்வர்க்கம் போனால் போவேன்; இல்லையேல் வேண்டாம்.

''உனக்கு சரீரத்தை விட இஷ்டமில்லாவிட்டால் இதோ காலன், ம்ருத்யு, யமன் மூவரும் உன்னிடம் வருகிறார்கள்''என்று சொல்லித் தர்மம் மறைந்தது. அப்படியே ஆயுளை நிர்ணயிக்கும் காலதேவதையும் பிராணனைக் கொண்டு போகும் ம்ருத்யுவும் புண்ய பாபங்களுக்குப் பலனைக் கொடுக்கும் யமதேவதையும் அவனிடம் வந்தனர்.

யமன் :- c செய்கிற நல்ல தவத்திற்கும் ஆசரணைக்கும் பலன் கிடைத்திருக்கிறது. நான் யமன், உனக்குச் சொல்கிறேன்.

காலன் :- c செய்த ஜபத்திற்கு உத்தம பலன் கிடைத்திருக்கிறது. உனக்கு ஸ்வர்க்கத்தை ஏற இதுவே காலம்.

ம்ருத்யு :- நான் ம்ருத்யு. காலத்தால் ஏவப்பட்டு உன்னை அழைத்துப் போக வந்திருக்கிறேன்.

பிரம்மணன் அவர்களுக்கு ஸ்வாகதம் உரைத்து அர்க்யம், பாத்யம், ஆசமனீயம் இவற்றை அளித்தான். அப்பபொழுது தீர்த்த யாத்திரை செய்துகொண்டிருந்த இக்ஷ்வாகு என்ற அரசனும் அவ்விடம் வந்தான். பிராம்மணன் இக்ஷ்வாகுவையும் பூஜித்து, ''அரசரே, நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?''என்றான்.

அரசனோ, ''நான் அரசன்;நீர் பிராம்மணர். உமக்குப் பணம் வேண்டியதைக் கொடுக்கிறேன்''என்றான்.

பிராம்மணன் தான் நிவிருத்தி மார்க்கத்தில் இருப்பதால் பணம் வேண்டாமென்றும், தன் தவத்தால் அரசனுக்கு வேண்டியதை அளிப்பதாகவும் கூறினான்.

அரசன், ''நான் யாசிப்பதில்லை. ஆனால், நீங்கள் பிரதிஜ்ஞை செய்வதால் தங்களுடைய ஜபபலனைக் கொடுங்கள்''என்றான்.

பிராம்மணன் அப்படியே தான் செய்த ஜபபலத்தை அவனிடம் அர்ப்பணம் செய்தான்.

அரசன், ''உன் ஜபத்திற்குப் பலன் என்னவென்று தெரியாதபடியால் அதைச் சொல்''என்று வினவ, பிராம்மணன், ''நான் ஜபத்திற்குப் பலனை உத்தேசிக்கவில்லை. ஆனால் எனக்குத் தெரியாது. நீர் பலனைக் கேட்டபடியால் கொடுத்துவிட்டேன். அஸத்தியம் மிகவும் கொடியது. ஸத்தியம் தவங்களைக் காட்டிலும் பெரிய தவம். ஆதலால் நான் தவறமாட்டேன்''என்றான்.

ராஜா, ''அறிவதும் உலகை ரக்ஷிப்பதும் எங்கள் தர்மம், க்ஷத்திரியர்கள் கொடையாளிகள்;வாங்குபவரல்ல''என்றான்.

பிராம்மணன் ''அரசே;நான் தங்கள் வீடு தேடிவந்து 'வாங்கிக் கொள்ளுங்கள்'என்று நிர்ப்பந்திக்கவில்லை. நீர் இவ்விடம் வந்து கேட்ட பின் கொடுத்தேன். நீங்கள் வேண்டாமென்பது எங்ஙனம்?''என்றான்.

இந்தத் தருணத்தில் தர்மதேவதை, ''நீங்கள் இருவரும் விவாதம் செய்கிறீர்கள். பிராம்மணனுக்குத் தானபலனும், ராஜனுக்கு ஸத்தியபலனும் கிடைக்கட்டும்''என்றது. இவ்விதம் பிராம்மணன் நிர்ப்பந்திக்க, ராஜன் அதை நிராகரித்துத் தன் புண்ணியத்தைக் கொடுப்பதாகப் பிரதிஜ்ஞை செய்ய, அரசனுடைய கோபமும் பிராம்மணனுடைய கோபமும் உருவம் கொண்டு, விரூபன் என்றும் விகிருதன் என்றும் பெயருடன் தோன்றி விவாதம் செய்தன. ஒருவன், ''நான் உனக்குக் கொடுக்க வேண்டிய பசுவைக் கொடுக்கிறேன் எடுத்துக்கொள்''என்கிறான். மற்றவன், ''c கொடுக்க வேண்டாம்''என்கிறான். இந்த உதாரணத்தால், கடனாளி கொடுக்க வேண்டிய கடனைக் கொடுத்தால் பெற்றுக்கொள்வது அவசியம் என்று ஏற்பட்டது. ஆகவே ராஜன் பிராம்மணன் கொடுத்த புண்ய தானத்தைக் துக்கத்துடன் பெற்றுக்கொண்டான். பெற்றுக்கொண்டு அவனிடம் எல்லாவற்றையும் திரும்பி அளித்தான். இருவரும் ஸமமாகவே பிரம்ம லோகம் சென்றனர். ஆகவே ஜபத்தின் முடிவான பலன் மோக்ஷமே என்று பீஷ்மர் தர்மபுத்திரருக்கு உரைத்தார்.


Previous page in    is தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி
Previous
Next page in   is  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்
Next