பகையை வென்றிடும் பக்திப் பாமலர்கள் (நம் பாரத நாட்டின் அமைதிக்குப் பங்கம் ஏற்படும் வகையில் பகைவர்களின் எதிர்ப்பு மிகுந்துள்ள இச் சந்தர்ப்பத்தில் தெய்வபக

பகையை வென்றிடும் பக்திப் பாமலர்கள்

(நம் பாரத நாட்டின் அமைதிக்குப் பங்கம் ஏற்படும் வகையில் பகைவர்களின் எதிர்ப்பு மிகுந்துள்ள இச் சந்தர்ப்பத்தில் தெய்வபக்தியின் வலிமையினால் நம் முன்னோர்கள் பகைவர்களை வென்ற வரலாற்றுப் பாடல்களைப் பாராயணம் செய்வது நமக்கும் நாட்டுக்கும் நற்பயன் அளிக்கும் என்று ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜேயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவுளம் கொண்டதற்கேற்பத் தெய்வீக நூல்கள் சிலவற்றிலிருந்து தொகுக்கப் பெற்ற அருட்பாடல்கள்)

1. திருஞானசம்பந்தர் தேவாரம்:

தீயவழிகளைக் கூறிப்பாண்டியநாட்டு மன்னனுக்கும் மக்களுக்கும் துன்பம் உண்டாக்கிய கொடுமைமிக்க சமணர்களால் திருஞானசம்பந்தருக்குத் துன்பம் ஏற்படுமோ? என்று அஞ்சிய பாண்டிமாதேவியை நோக்கி ஆலவாயரன் அருளினால் இத்தீயவர்களை வெல்வேன் என்று சம்பந்தர் உறுதியளித்த பாடல்கள்

அ, மானின் நேர்விழி மாதராய்வழு திக்கு மாபெருந் தேவி கேள்

பானல் வாயரு பாலன் ஈங்கிவன் என்று c பரிவு எய்திடேல்

ஆனைமாமலை யாதியாய இடங்களில் பல அல்லல் சேர்

ஈனர்கட்கெளி யேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே

ஆ, சந்துசேனனும் இந்து அசனனும் தருமசேனனும் கருமைசேர்

கந்து சேனனும் கனகசேனனும் முதலதாகிய பெயர்கொளா

மந்திபோல் திரிந் தாரியத்தோடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா

அந்தர்க்கெளி யேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே

2. திருநாவுக்கரசர் தேவாரம் :

சிவபெருமான் மீது வைத்த உறுதியான பக்தியின் வலிமையால் தம்மைத் துன்புறுத்திய அரசனது ஆணையையே எதிர்த்து வென்ற திருநாவுக்கரசரின் பாடல்கள் :

அ, நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்

நரகத்தில் இடர்ப்படோம், நடலை யில்லோம்

ஏமாப்போம் பிணியறியோம்: பணிவோ மல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பமில்லை

தாமர்க்கும் குடியல்லாத் தன்மையான

சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதில்

கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

கொய்ம் மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே

ஆ, என்றும் நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்

இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை

சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்

சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்

இ, ஒன்றினால் குறையுடையோம் அல்லோ மன்றே

உறுபிணியார் செறல் ஒழிந்திட் டோடிப் போனார்

பொன்றினார் தலைமாலை அணிந்த சென்னிப்

புண்ணியனை நண்ணியபுண் ணியத்து யோமே

3. சுந்தரர் தேவாரம் :

தன்பாதுகாப்பில் உள்ள மக்களைத் துன்பத்திலிருந்து காப்பதே இறைவனது கடமை என்பதை உணர்த்தும் வகையில் திருமுருகன்பூண்டி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் இறைவனிடம் சுந்தரர் தம்மை இம்சித்துத் தம்மிடமிருந்து பொருட்களை செயலைத் தடுக்காமல் இங்கு அமைதியாக வீற்றிருப்பது நியாயமோ? என்று கேட்டுப் பாடியுள்ள பாடல்கள்:-

அ, வில்லைக் காட்டி வெருட்டிவேடுவர் விரவ லாமை சொல்லிக்

கல்லினால் எறிந்திட்டுமோதியும் கூறை கொள்ளுமிடம்

முல்லைத்தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்

எல்லைகாப் பதொன் றில்லை யாகில் எத்துக் கிங்கிருந்தீர்? எம்பிரானிரே

ஆ, பசுக்களே கொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்றறியார்

உசிர்க் கொலைபல நேர்ந்து நாடொறும் கூறை கொள்ளுமிடம்

முசுக்கள் போல்பல வேடர் வாழ் முருகன்பூண்டி மாநகர்வாய்

இசுக்கழியப் பயிக்கம் கொண்டுநீர் எத்துக் கிங்கிருந்தீர்? எம்பிராணிரே

4. மாணிக்கவாசகர் திருவாசகம்:

இறைவன் திருவருளைப் பெற்றுச் சிவலோகம் ஆள்வதற்குத் தடையாக உள்ள பாச பந்தங்களைப் போரிட்டு வெற்றி கொள்ள அடியார்களை அழைக்கும் மாணிக்க வாசகர் பாடல்கள்:-

அ, ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறை மின்

மானமா ஏறும் ஐயர் மதிவெண் குடை கவிமின்

ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்

வானவூர் கொள்வோம் நாம் மாயப்படை வாராமே

ஆ, தொண்டர்காள் தூசி செல்வீர் பக்தர்காள் சூழப் போகீர்

ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்

திண்திறல் சித்தர்களே கடைக் கூழை செல்மின்கள்

அண்டர் நாடாள்வோம் நாம் அல்லற் படை வாராமே

5. கந்தபுராணம் :

சூரபன்மனால் அல்லலுற்றுத் தம்மைச்சரணாக அடைந்து வழிபட்டு முறையிட்டு வேண்டிக் கொண்ட தேவர்களை, முருகப் பெருமான் அசுரர் கூட்டத்தோடு சூரபன்மனை அழித்துக் காப்பாற்றிய வரலாறு:-

சூரபன்மன் வதைப் படலத்திலிருந்து தொகுத்தளிக்கப்படும் கந்த புராணப் பாடல்கள்:-

அ, ஆடியல் கொண்ட சூரன் அந்தரத் தெழலும் வானோர்

கூடிய ஓதி தன்னால் குறிப்பினால் தெரிந்து நம்மைந்

சாடிய வருவன் என்னாத் தலைத்தலை சிதறி நில்லாது

ஓடினர் கூற்றை நேர்ந்த உயிரென இரங்க லுற்றார்

ஆ, நண்ணினர்க்கினியாய் ஓலம் ஞான நாயகனே ஓலம்

பண்ணவர்க்கிறையே ஓலம் பரஞ்சுடர் முதலே, ஓலம்

எண்ணுதற் கரியாய் ஓலம் யாவையும் படைத்தாய் ஓலம்

கண்ணுதற் பெருமான் நல்கும் கடவுளே ஓலம்,ஓலம்

இ, தேவர்கள் தேவே ஓலம் சிறந்த சிற்பரனே ஓலம்

மேவலர்க் (கு) இடியே ஓலம் வேற்படை விமலா ஓலம்

பாவலர்க் கெளியாய் ஓலம் பன்னிரு புயத்தாய், ஓலம்

மூவருமாகி நின்ற மூர்த்தியே, ஓலம் ஓலம்

ஈ, கங்குலின் எழுந்த கார்வோல் கனையிருள்மறைவின்ஏகி

நுங்கிய செல்வான் சூரன் ஓடவும் நோன்மை இல்லேம்

எங்கினி உய்வம் ஐய இறையும் c தாழ்க்கல் கண்டாய்

அங்கவன் உயிரை உண்டுஎம் ஆவியை அருளு கென்றார்

உ, அங்கவர் மொழியும் வெய்யோன் ஆற்றலும் தெரிந்து செவ்வேன்

செங்கைய (து) ஒன்றில் வைகும் திருநெடு வேலை நோக்கி

இங்கிவன் ஆகம் போழ்ந்தே ஏகுதி இமைப்பின் என்னாத்

துங்கம துடைய சீர்த்திச் சூரன்மேல் செல்லத் தொட்டான்

ஊ, விடம் பிடித் தமலன் செங்கண் வெங்கனல் உறுத்திப் பாணி

இடம்பிடித் திட்டதீயில் தோய்த்துமுணன் இயற்றியன்ன

உடம்பிடித் தெய்வம் இவ்வாறு உருகெழு செலவின் ஏகி

மடம் பிடித் திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்த தன்றே

(துன்பம் நீங்கிய தேவர்கள்)

எ, வள்ளலை வணங்கிப் பலகால் வழுத்தியே தொழுது தத்தம்

உள்ளமும் புறத்தில் என்பும் உருகிட விழியில் தூநீர்

தள்ளுற உரைகள் முற்றும் தவறிடப் பொடிப்ப யாக்கை

கள்ளுணவுற்ற வண்டின் களிமகிழ் சிறந்து நின்றார்

6. திருவிளையாடற் புராணம்:-

தன் நாட்டின் மீது படையெடுத்து வந்த சோழ மன்னனை வெற்றி கொள்ளப் போதிய படைபலம் இல்லாத பாண்டிய மன்னன் சோம சுந்தரக் கடவுளிடம் சென்று தன் வெற்றிக்குத் துணை புரிந்தருள வேண்டுமென்று வேண்டிக் கொண்டதற்கேற்ப, சோம சுந்தரக் கடவுள் ஒரு வேடுவனாக வந்து பாண்டியன் சார்பாகப் போரிட்டு அவனுக்கு வெற்றியைத் தேடித் தந்த வரலாறு:-

சுந்தரப் பேரம்பெய்த படலத்திலிருந்து தொகுத்தளிக்கப்படும் திருவிளையாடற் புராணப்பாடல்கள்:-

அ. என்னை யினிச்செயு மாறென மாறன் இரந்து மொழிந்திடலும்

முன்னவன் வானிடை நின்றச gK மொழிந்தருள்வான் "முதல் c

அன்னவ னோடம ராடு, பின்நாமும் அடைந்துதவித் துணையாய்

நின்னது வாகை, எனப் பொருகின்றனம் c இனி அஞ்சல்" என

ஆ, சிந்தை களித்திரு கண்கள் துளித்திரு செங்கை குவித்திறைவன்

அந்திமதிச்சடை அந்தணனைத் தொழு தன்று புறப்பட முன்

வந்தனன் ஒற்றுவன் "நந்திவரைக்கயல் வந்தது விக்கிரமன்

வெந்தறு கட்படை" என்றர சற்கு விளம்பினன் அப்பொழுதே

இ, அளந்து சூழ்திரு ஆலவாய் மதிரின்புறத்தகழ் ஆழிபோல்

வளைந்த சோழன் நெடும்படைக் கெதிர் வஞ்சிவேய்ந்தெழு பஞ்சவன்

கிளைந்த சேனை அதிர்ந்து கிட்டின கிட்டி அவ்விரு படை ஞரும்

களம் சிறந்திட வஞ்சினங்கொடு கைவகுத்தமர் செய்வரால்

ஈ, அந்த வேலையின் முன அருந்தம தருளெனக்குளிர் கடிபுனல்

பந்தர் நீழல் அளித்தும் ஓடைபடுத்தியும் பகை சாயவே

வந்த வேடர் அவ் வண்ணமே ஒரு மான வேடர சாய்வலம்

சிந்த, ஆகுலம் மூழ்கு மீனவன் சேனை காவல ராயினார்

உ, குன்றவில் வேடன்சாபம் குனிவித்துச்சுந்த ரேசன்

என்றதன் நாமம் தீட்டி இட்ட கூர்ங் கணைகள் தூண்டி

வென்றனம் என்று வாகை மிலைந்துவெண் சங்கம் ஆர்த்து

நின்றவன் சேனைமீது நெறிப்படச் செலுத்தா நின்றான்

ஊ, அன்னகூர் வாளிதன்னைக் கொணர்கென அதனை வாசித் (து)

இன்னது சுந்தரேசன் எனவரைந் திருப்பது : ஈது

தென்னவற் காலவாயான் துணை செய்த செயலென் றஞ்சிப்

பொன்னிநா டுடையான் மீண்டுபோகுவான் போகு வானை

(தடுத்து நிறுத்தி அவனுக்குத் துணையாக வந்த மாற்றரசர்கள் அவனுடன் சேர்ந்து மீண்டும் போரிட்டார்கள். அப்போது...)

எ, புரத்தினில் உயர்ந்த கூடற் புண்ணியன் எழுதி எய்த

சரத்தினில் அவிந்தார் சென்னிக் (கு) உற்றுழிச் சார்வாய் வந்த

அரத்தினை அறுக்கும் வைவேல் அயற்புலவேந்தர் நச்சு

மரத்தினை அடுத்த சந்தும் கதழ்எரி மடுத்த தென்ன

ஏ, வில்லோடு மேகம் அன்ன வெஞ்சிலை வேடவேந்தன்

மல்லோடு பயின்ற தென்னன் மலர் முகச் செல்வி நோக்கி

அல்லோடு மதிவந்தென்ன அருள் நகை சிறிது பூத்துச்

செல்லொடு பகைபோல் கொண்ட திருவுரு மறைந்து போனான்

7. பெரியபுராணம்:

(பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்து வெற்றி கொண்ட கருநாடக மன்னன் தனக்குமாறான சைவசமயத்தை அழிக்க முற்பட்டு மதுரையில்

இறைவனுக்குச் சந்தனக்காப்பிடத்தினமும் தவறாமல் சந்தனம் அரைத்துக் கொடுத்து வந்த மூர்த்தியார் என்னும் தொண்டருக்கு எங்குமே சந்தனம் கிடைக்காதபடி செய்து விட்டான். அப்போதும் மூர்த்தியார் தமது முழங்கையையே சந்தனக்கட்டையாகத் தேய்க்க இறைவன் அவரது உண்மையான பக்தியைக்கண்டு உளம் உருகி அசரீரியாக "அன்பனே உமது அன்பின் தன்மையைக் கண்டு மகிழ்ந்தோம். பக்தியின் பரவசத்தால் இப்படி c உன்னையே வருத்திக் கொள்ளாதே உனது தொண்டுக்கு இடையூறு செய்த அரசன் உடனே அழிவான். அவன் ஆண்ட இப்பாண்டி நாட்டுக்கு நீயே அரசனாகித் தொடர்ந்து உமது தொண்டைச் செய்து வந்து நிறைவாக நம்மை அடைவாயாக" என்றருளினார். அவர் அருளியவாறே அன்றையதினம் இரவே அக்கருறாடக அரசன் இறந்தான் பின்னர் மூர்த்தி நாயனரே பாண்டிய நாட்டின் அரசராகப் பொறுப்பேற்று அருளாட்சி புரிந்து இறைவன் திருவடியடைந்தார்.


மூர்த்தி நாயனார் வரலாற்றிலிருந்து தொகுக்கப் பெற்ற பெரிய புராணப்பாடல்கள்:-

1. நாளும் பெருங்காதல் நயப்புறும் வேட்கை யாலே

கேளும் துணையும் முதற் கேடில் பதங்களெல்லாம்

ஆளும் பெருமான் அடித் தாமரை அல்ல தில்லார்

மூளும் பெருகன் பெனும் மூர்த்தியார் மூர்த்தியார்தாம்

2. அந்திப் பிறைசெஞ்சடை மேலணி ஆலவாயில்

எந்தைக் கணிசந்தனக் காப்பிடை என்றும் முட்டா

அந்தச் செயலின் நிலை நின்றடி யார் உவப்பச்

சிந்தைக் கினிதாய திருப்பணி செய்யும் நாளில்

3. கானக் கடிசூழ்வடு கக்கரு நாடர் காவல்

மானப் படை மன்னன் வலிந்து நிலங்கொள்வானாய்

யானைக் குதிரைக்கரு விப்படை வீரர் திண்தேர்

சேனைக் கடலுங்கொடு தென்திசை நோக்கி வந்தான்

4. வந்துற்ற பெரும்படை மண்புதை யப்ப ரப்பிச்

சந்தப் பொதியில் தமிழ் நாடுடை மன்னன் வீரம்

சிந்தச் செருவென்றுதன் ஆணை செலுத்த மாற்றால்

கந்தப் பொழில் சூழ்மது ராபுரி காவல் கொண்டான்

5. செக்கர்ச்சடை யார்விடை யார்திரு ஆல வாயுள்

முக்கட் பரனார்திருத் தொண்டரை மூர்த்தி யாரை

மைக்கற் புரை நெஞ்சுடை வஞ்சகன் வெஞ்ச மண்பேர்

எக்கர்க் குடனாக இகழ்ந்தன செய்ய எண்ணி

6. எள்ளுஞ் செயல் வன்மைகள் எல்லையில் லாத செய்யத்

தள்ளுஞ் செயலில்லவர் சந்தனக் காப்புத் தேடிக்

கொள்ளும் துறையும் அடைத்தான் கொடுங் கோன்மை செய்வான்

தெள்ளும் புனல் வேணியர்க் கன்பரும் சிந்தை நொந்து

7. கல்லின் புறந்தேய்ந்த முழங்கை சுலுழ்ந்து சோரி

செல்லும் பரப்பெங்கணும் என்பு திறந்து மூளை

புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பிரானார்

அல்லின்கண் எழந்த (து) உவந்தருள்செய்த வாக்கு

8. "அன்பின் துணிவால்இது செய்திடல் ஜய உன்பால்

வன்புன்கண் விளைத்தவன்கொண்டமண் எல்லாம் கொண்டு

முன்பின்னல் புகுந்தன முற்றவும் நீத்துக் காத்துப்

பின்புன்பணி செய்துநம்பேருல கெய்து" கென்ன