விநாயக புராணம் 1 சிறப்புப்பாயிரம் கணபதி வணக்கம் அறிவிற்கறிவுற்றவொளியக்கொளியா-ரணுவிற்கணுமுற்றுமுயிர்க்குயிராய் நிறைநித்தவொரக்கரவத்துவதாய்-நிக

விநாயக புராணம்

1. சிறப்புப்பாயிரம்

கணபதி வணக்கம்

அறிவிற்கறிவுற்றவொளியக்கொளியா-ரணுவிற்கணுமுற்றுமுயிர்க்குயிராய்

நிறைநித்தவொரக்கரவத்துவதாய்-நிகழ்முத்தொழிலத்தலைவர்கிறையாய்

மறையுச்சிநடப்பொருள்கைக்ளிறாய்-வருபத்தசனர்க்கருள்வைப்பினெழிற்

செறிமிக்கமணத்தியல்பொற்கமலத்-துணைநற்கழலைச்செனியிற்புனைவாம்.

சித்தி புத்திகள் வணக்கம்

வினைத்துணையாய்நின்றுலகங்களையாக்கிவிரிபொறிக்குவிளக்கநல்கிச்

கனத்தகருமதூட்டுங்கிரியாஞானத்திறமாய்கணேசனெந்தை

இனைத்தெனவீரேழுலகுஞ்சொலற்கரியபுகழாளியிருபானின்றிங்

கனைத்துயிரும்புரந்தளுஞ்சித்திபுத்திதேவியர்த்தாளகத்துட்சேர்ப்பாம்.

பரசிவ வணக்கம்

அனாசுத்தவறிவொளியபூரணானந்தமாயருளாலிங்கு

வினோதவகையகிலாண்டமைந்தொழிற்பாற்படுத்தியருவித்தாய்மேலாந்

தனாதிச்சைவலியாலேபசுபதியாயம்மையப்பன்றானேயாகி

மனாதியன்றவளவாதாங்காருணியப்பெருந்தகையைவழுத்திவாழ்வாம்.

பராசக்தி வணக்கம்.

உலகெவைக்குஞ்செனனியாயீன்றருளியவற்று

ளுயிர்த்திரட்கோர்பரிபாகத்திருச்செவிலியாகிப்

பலவறனும்புரிந்துபசுபதியினொருவாம

பாகத்துமரகதமும்பளிங்குமெனச்செவ்வி

நிலவநிலைபெயராதயோகியர்தம்யோக

நிட்டானுபூதியதாய்நிகமாகமாதிக்

கலைகடுதித்திடவிளங்குமமலையிருசரண

கமலமென்னெஞ்சிடையலர்ந்துதினங்கமழுமாதோ.

சுப்பிரமணியர் வணக்கம்

பிரமைதவிர்த்திடமஹே சரிதயத்திற்றேன்றிப்

பெருகருளிற்பின்னர்பெருந்தகைக்கணுதித்தறிஞர்

கருதுகரிமுகனாகிச்சண்முகனாய்க்காத்துக்

கருணையாசனனாகிப்பரைவளர்க்கவமரர்

சிரமைதவிர்த்திடஞானசத்திதரனாய்மேற்

றெளியிச்சைகிரியைபிரியாப்பிரியனாகி

விரதருளக்குகையமர்ந்தசிவகுருவாயென்றும்

வேண்டினோர்க்கருள்புரிந்துவருமயிலின்மிசையே

நால்வர் வணக்கம்

தொண்டர்குழாங்களிசிறப்பச்சுருதிமுதற்கலைகளெலாந்துதிப்பச்சீர்சா

லண்டர்பிரான்றிருச்செவிக்கற்புதமுறச்செந்தமிழ்ப்பதிகவமுதந்தூவுங்

கொண்டலெனுங்காழியனாராமூரராரூரளங்குழைந்து

கண்டமன்றிற்சுடரினென்றும்வாதவூரடிகள்பதங்கருத்துள்வைப்பாம்.

நூலாசிரியர்கள் வணக்கம்

ஆதிசிவனிடத்துணர்ந்தவயனாற்றேர்வியாதமுனியன்பினோடு

மோதுகணாபத்தியமான்மியமுலகோருய்யவாரியத்துரைத்த

மாதவபார்க்கவர்கமலமலரடியுமற்றதைவண்டமிழாற்சொன்ன

தீதிலாவடுதுறையெங்கச்சியப்பமுனிபதமுஞ்சென்னிசேர்ப்பாம்.

நூற்பயன்

உலகினருந்தவத்தாலும்பல்விரதத்தாலுநெடிதுள்ளநொந்து

நலனடையப்பெறுவதெவனோனாமேயின்பமெலாநாடினோர்க்கப்

பலனெளிதிற்றருமன்றோமேனாளிற்சூதமுனிபனவர்க்கோது

மலகில்புகழ்விநாகமான்மியந்தனிலோர்செயுணாவினறையத்தானே.

அவையடக்கம்

பொருவில்விநாயகர்கீதைக்கேள்வியினான்மூவர்கதிப்புக்காரென்னப்

பெருமொழிகேட்டுயப்போகுமாசையினாற்சிலசுருக்கிப்பேசினேனான்

சொரிதருபாலொடுமயநீர்போலுமுதனூலோடுதொகுமிந்தாலும்

அருளுடையபெரியர்கொள்வர்முதனோக்கிப்பிழையெண்ணாதாக்கமோர்ந்தே.