திருப்பாவைத் தனியன்கள்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

திருப்பாவைத் தனியன்கள்

பட்டர் அருளிச் செய்தது

நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ஒம் பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸதஸிரஸ்ஸித்த மத்யாபயந்தீ, ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே

கோதாதஸ்யை நம இதமிதம் பூத ஏவாஸ்துபூய:

உய்யக் கொண்டார் அருளியவை

நேரிசை வெண்பா

அன்ன வயற்புதுவை யாண்டாள் அரங்கற்குப்

பன்னு திருப்பாவை பல்பதியம்,-இன்னிசையால்

பாடிக் கொடுத்தாள்நற் பா மாலை- பூமாலை

சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே!தொல்பாவை,

பாடி யருளவல்ல பல்வளையாய்,-நாடிநீ

'வேங்கடவற் கென்னை விதி'என்ற இம்மாற்றம்

நாங்கடவா வண்ணமே நல்கு.

ஆண்டாள் திருவடிகளே சரணம்








 



 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is சென்னியோங்கு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  திருப்பாவை
Next