மான்கொண்ட

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஆறாம் பத்து

மான்கொண்ட

திருநறையூர் - 5

திருநறையூர்த் திருமாலின் திவ்விய தரிசனம் கிடைக்கப் பெற்ற ஆழ்வார் மனமகிழ்ந்து பாடுகிறார்.

தரவு கொச்சகக் கலிப்பா

திருவேங்கடத்தானைத் திருநறையூரில் கண்டேன்

1518. மான்கொண்ட தோல்மார்வில் மாணியாய், மாவலிமண்

தான்கொண்டு தாளால் அளந்த பெருமானை,

தேன்கொண்ட சாரல் திருவேங் கடத்தானை,

நான்சென்று நாடி நறையூரில் கண்டேனே. 1

கடல் கடைந்தவனை நறையூரில் கண்டேன்

1519. முந்நீரை முன்னாள் கடைந்தானை, மூழ்த்தநாள்

அந்நீரை மீனா யமைத்த பெருமானை,

தென்னாலி மேய திருமாலை யெம்மானை,

நன்னீர் வயல்சூழ் நறையூரில் கண்டேனே. 2

கருடவாகனனை நறையூரில் கண்டேன்

1520. தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம்

மூவாமை நல்கி முதலை துணித்தானை,

தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை,

நாவாயு ளானை நறையூரில் கண்டேனே. 3

திருநீர்மலையானைத் திருநறையூரில் கண்டேன்

1521. ஓடா அரியா யிரணியனை யூனிடந்த,

சேடார் பொழில்சூழ் திருநீர் மலையானை,

வாடா மலர்த்துழாய் மாலை முடியானை,

நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே. 4

வில்வீரன் இராமனை நறையூரில் கண்டேன்

1522. கல்லார் மதில்சூழ் கடியிலங்கைக் காரரக்கன்

வல்லாகங் கீள வரிவெஞ் சரம்துரந்த

வில்லானை, செல்வ விபீடணற்கு வேறாக

நல்லானை, நாடி நறையூரில் கண்டேனே. 5

யசோதை சிறுவனை நறையூரில் கண்டேன்

1523. உம்ப ருலகோ டுயிரெல்லாம், உந்தியில்

வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை,

அம்பன்ன கண்ணா ளசோதைதன் சிங்கத்தை,

நம்பனை நாடி நறையூரில் கண்டேனே. 6

கிருஷ்ண பரமாத்மாவை நறையூரில் கண்டேன்

1524. கட்டேறு நீள்சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி

விட்டானை, மெய்யம் அமர்ந்த பெருமானை,

மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய், வண்துவரை

நட்டானை நாடி நறையூரில் கண்டேனே. 7

பூகாரம் தீர்த்த கண்ணனைக் கண்டேன்

1525. மண்ணின் e பாரங் கெடுப்பான், மறமன்னர்

பண்ணின்மேல் வந்த படையெல்லாம், பாரதத்து

விண்ணின்மீ தேற விசயன்தே ரூர்ந்தானை,

நண்ணிநான் நாடி நறையூரில் கண்டேனே. 8

திருக்குடந்தைக் கிடந்தவனைக் கண்டேன்

1526. பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும்

சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானை,

கொங்கேறு சோலைக் குடந்தைக் கிடந்தானை,

நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே. 9

தேவர்க்கெல்லாம் தேவர் ஆவர்

1527. மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை,

நன்னறையூர் நின்ற நம்பியை, வம்பவிழ்தார்

கன்னவிலும் தோளான் கலிய னொலிவல்லார்,

பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே. 10

அடிவரவு:மான் முந்நீர் தூவாய ஓடா கல் உம்பர் கட்டேறு மண் பொங்கு மன்னு -- பெடை.








 





 










 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is ஆளும் பணியும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  பெடையடர்த்த
Next