ஷட்பதீஸ்தோத்ரம் 1 அவினய மபநய விஷ்ணோதமய மந:சமயம் ருகத்ருஷ்ணாம்! பூததயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத: !! ஹே விஷ்ணோ!எனது பண்வின்மையைப் போக்கு!மனதை அடங்கச் செய்

ஷட்பதீஸ்தோத்ரம்

1.அவினய மபநய விஷ்ணோதமய மந:சமயம் ருகத்ருஷ்ணாம்!

பூததயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத: !!

ஹே விஷ்ணோ!எனது பண்வின்மையைப் போக்கு!மனதை அடங்கச் செய். பேராசையையும் தணித்து விடு. எல்லா ஜீவராசிகளிடத்தும் தயை வரச்செய். என்னை ஸம்ஸாரக் கடலிலிருந்து அக்கரை சேர்ப்பித்து விடு.

2.திவ்யதுனீ மகரந்தே பரிமல பரிபோகஸச்சிதானந்தே !

ஸ்ரீபதிபதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே !!

கங்கையை மகரந்தமாகக் கொண்டதும், ஸத்-சித்-ஆனந்தமாகியவற்றை வைசனையாகக் கொண்டதும், உலகில் துன்பத்தைப் போக்குவதுமான ஸ்ரீபதியான நாராயணனின் திருவடித்தாமரைகளை வணங்குகின்றேன்.

3.ஸத்யபிபேதாப்கமே நாத!தவாஹம் நமாமகீனஸ்த்வம்!

ஸாமுத்ரோ U தரங்க:க்வசன ஸமுத்ரோ ந தாரங்க: !!

ஜீவாத்மாவான எனக்கும், பரமாத்மாவான எனக்கும் உமக்குமிடையில் வேற்றுமை இல்லையெனினும், ஹே ஸ்வாமி நான் உம்மைச் சேர்ந்த அடிமையே:தாங்கள் எனது உடைமையானவரல்ல. அலைதானே ஸமுத்திரத்தையண்டிது. ஒரு போதும் கடல், அலைகளில் அடங்கியதில்லையன்றோ!

4.உத்ருதநக நகபிதனுஜ தனுஜகுலாமித்ர மித்ரசசித்ருஷ்டே !

த்ருஷ்டே பவதி ப்ரபவதி ந பவதி கிம் பவதிரஸ்கார: !!

கோவர்தன மலையை தூக்கியவரே!இந்திரனின் இளையவரே!அசுரக்கூட்டத்தை அழித்தவரே!சூர்ய சந்திரர்களை கண்களாகக் கொண்டவரே!தாங்கள் கண்ணுக்கெதிரே வந்து திறமையைக் காட்டும் பொழுது எவருக்குத்தான் உலகியலில் இழிவு தோன்றாது?

5.மத்ஸ்யாதிபிரவதாரை ரவதாரவதாஷிவதாஸதா வஸுதாம் !

பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாப பீதோஷிஹம் !!

மத்ஸ்ய-கூர்மாதி அவதாரங்களால் இறங்கிவந்து பூமியை காத்தருளும் தங்களால், ஸம்ஸார தாபத்தால் மருண்ட நான் காக்கப்பட வேண்டியவரன்றோ!ஹே பெருமாளே!

6.தாமேதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த !

பவஜலதிமதன மந்தர பரமம் தரமபநய த்வம் மே !!

தாமோதரனே!குணங்களுக்கு கோயிலானவனே! அழகிய தாமரையத்த

முகம் கொண்டவனே!கோவிந்த!ஸம்ஸாரக்கடலை கடையும் மந்தர மலையானவனே! எனது பெரும் துன்பத்தைப் போக்குவாயாக!

7.நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ !

இதி ஷட்பதீ மதீயே வதன ஸரோஜே ஸதா வஸது !!

ஹே நாராயண!கருணை வடிவானவனே! உனது திருவடிகளை சரணம் அடைகிறேன் என்ற இந்த ஆறு சொற்கள் என் முகத்தில் எப்பொழுதும் தங்கட்டும்.

ஷட்பதீ ஸ்தோத்திரம் முற்றுப் பெறுகிறது.