உண்மையான ஸ்மரணம் வாயால் ‘நாராயண’ என்று சொன்னால் அது நாராயண ‘வசனம்’தான்; ‘ஸ்மரணம்’ இல்லை ‘ஸ்மரணம்’ என

உண்மையான ஸ்மரணம்

வாயால் ‘நாராயண’ என்று சொன்னால் அது நாராயண ‘வசனம்’தான்; ‘ஸ்மரணம்’ இல்லை. ‘ஸ்மரணம்’ என்றால் மனஸால் நினைப்பது, நன்றாக நினைப்பது. வெறுமே வாயால் மட்டும் சொல்லி ப்ரயோஜனமில்லை. மனப்பூர்வமாக நினத்துச் சொல்லணும். ஆனால் நடை முறையில் என்ன ஆகிறதென்றால், ஒரு ஸ்தோத்ரம், மந்த்ரம் எதுவானாலும் ஸரி, அடிக்கடி ஒரு ‘ரொடீனா’கச் சொல்கிற போது வார்த்தையை மாத்திரம் சொல்வதாகத்தான் ஆகி விடுகிறது; அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தமோ அதை மனஸ் நினைக்காமல், மனஸ் அது பாட்டுக்கு எதையோ யோஜிப்பதாகவும் வாய்மட்டும் மொண மொண பண்ணுவதாகவும் ஆகி விடுகிறது! அப்படி இங்கேயும் நாராயணனை ஸ்மரிக்காமல் பேரை மாத்திரம் சொன்னால் மஹா தோஷமாகி விடும். மநுஷ்யாளுக்கு மநுஷ்யாள் ’மிஸப்ரோப்ரியேட்’ பண்ணுவதே குற்றமென்றால் பகவானுக்கானதை அப்படிப் பண்ணுவது மஹா பெரிய குற்றந்தானே? ஸதா காலமும் ஸர்வ ஜாக்ரதையாக இருந்தாலொழிய, ஒரு ஸந்நியாஸிக்குப் பல பேர் தினந்தினமும் நமஸ்காரம் பண்ணுகிறபோது அவன் ‘நாராயண’ சொல்வது ஒரு ரொடீனாகி விடுவதில் அவன் இப்படிப்பட்ட அபராதத்திற்கு ஆளாகி விடக்கூடும். அதனால்தான் இந்த விதியை ‘ஈஸி’ என்று சொல்லாமல், ‘ஈஸி மதிரி இருக்கிற’ என்று சொன்னேன்.