கங்குலும் பகலும்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஏழாம் பத்து

கங்குலும் பகலும்

நம்மாழ்வார் ஸ்ரீ ரங்கநாதனிடம் கொண்டிருக்கும் ஈடுபாட்டின் மிகுதியை இப்பகுதி கூறுகிறது. ஆழ்வாராகிய தலைவியின் நிலையைக் கண்ணுற்ற தாய் அரங்கராகிய தலைவரைப் பார்த்து வினவுதல்போல் ஈண்டுப் பாடல்கள் அமைந்துள்ளன.

தலைவியின் தளர்ச்சி கண்ட தாய் தலைவனை வினாதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருவரங்கா!என் மகள் திறத்து என்ன செய்யப்போகிறாய்?

3348. கங்குலும் பகலும் கண்டுயி லறியாள்

கண்ணநீர் கைகளால் இறைக்கும்,

சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும்

'தாமரைக் கண்'என்றே தளரும்,

'எங்ஙனே தரிக்கே னுன்னைவிட் ª 'டன்னும்

இருநிலம் கைதுழா விருக்கும்,

செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய்!

இவள்திறத் தென்செய்கின் றாயே?' 1

முகில் வண்ணா!இத்தலைவியின் முடிவுதான் என்ன?

3349. 'என்செய்கின் றாயென் தாமரைக் கண்ணா!

என்னும்கண் ணீர்மல்க இருக்கும்,

'என்செய்கே னெறிநீர்த் திருவரங் கத்தாய்?'

என்னும்வெவ் வுயிர்த்துயிர்த் துருகும்,

'முன்செய்த வினையே!முகப்படாய்'என்னும்

'முகில்வண்ணா!முகப்படாய்' என்னும்

முன்செய்திவ் வுலகம் உண்டுமிழ்ந் தளந்தாய்!

என்கொலோ முடிகின்ற திவட்கே? 2

மணி வண்ணா!இவளை c என்னதான் செய்துவிட்டாய்?

3550. வட்கிலள் இறையும் 'மணிவண்ணா!'என்னும்

வானமே நோக்கும்ம்மை யாக்கும்,

'உட்குடை யசுரர் உயிரெல்லா முண்ட

ஒருவனே!'என்னுமுள் ளுருகும்,

'கட்கிலீ!உன்னைக் காணுமா றருளாய்

காகுத்தா!கண்ணனே!'என்னும்,

திட்கொடி மதிள்சூழ் திருவரங் கத்தாய்!

இவள்திறத் தென்செய்திட் டாயே? 3

அரங்கா!நீ என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்?

3351. இட்டகால் இட்ட கைகளாய் இருக்கும்

எழுந்துலாய் மயங்கும்கை கூப்பும்,

'கட்டமே காதல்!'என்றுமூர்ச் சிக்கும்

'கடல்வண்ணா!கடியைகாண்'என்னும்

'வட்டவாய் நேமி வலங்கையா!'என்னும்

'வந்திடாய்'என்றென்றே மயங்கும்

சிட்டனே!செழுநீர்த் திருவரங் கத்தாய்!

இவள்திறத் தென்சிந்தித் தாயே? 4

அரங்கா!என் மகளை மயக்கிவிட்டாயே!

3352. சிந்திக்கும் திகைக்கும் தேறும்கை கூப்பும்

'திருவரங் கத்துள்ளாய்!'என்னும்

வந்திக்கும், ஆங்கே மழைக்கண்ணீர் மல்க

'வந்திடாய்'என்றென்றே மயங்கும்,

அந்திப்போ தவுணன் உடலிடந் தானே!

அலைகடல் கடைந்தவா ரமுதே,

சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த

தையலை மையல்செய் தானே! 5

பாம்பணையாய்!நான் என்னதான் செய்வேன்?

3353. 'மையல்செய் தென்னை மனம்கவர்ந் தானே!'

என்னும்'மா மாயனே!'என்னும்,

'செய்யவாய் மணியே!'என்னும்'தண் புனல்சூழ்

திருவரங் கத்துள்ளாய்!'என்னும்

'வெய்யவாள் தண்டு சங்குக் கரம்வில்

ஏந்தும்விண் ணோர்முதல்!'என்னும்,

பைகொள்பாம் பணையாய்!இவள்திறத் தருளாய்

பாவியேன் செய்யற்பா லதுவே. 6

கடல்வண்ணா!என் மகள் கண்ணீர் சிந்துகிறாளே!

3354. 'பாலதுன் பங்கள் இன்பங்கள் படைத்தாய்!

பற்றிலார் பற்றநின் றானே,

காலசக் கரத்தாய்!கடலிடங் கொண்ட

கடல்வண்ணா!கண்ணனே!'என்னும்,

'சேல்கொள்தண் புனல்சூழ் திருவரங் கத்தாய்!'

என்னும்'என் தீர்த்தனே!'என்னும்

கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்

என்னுடைக் கோமளக் கொழுந்தே. 7

என் மகள் புலம்புகிறாளே!நான் என் செய்வேன்?

3355. 'கொழுந்துவா னவர்கட்ª 'கன்னும்'குன் றேந்திக்

கோநிரை காத்தவன்!'என்னும்,

அழுந்தொழும் ஆவி அனலவெவ் வுயிர்க்கும்

'அஞ்சன வண்ணனே!'என்னும்,

எழுந்துமேல் நோக்கி யிமைப்பிலள் இருக்கும்

'எங்ஙனே நோக்குகேன்?'என்னும்,

செழுந்தடம் புனல்சூழ திருவரங் கத்தாய்!

என்செய்கேன் என்திரு மகட்கே? 8

கண்ணா!என் மகளின் முடிவு தெரியவில்லையே!

3356. 'என்திரு மகள்சேர் மார்வனே!'என்னும்

'என்னுடை யாவியே!'என்னும்,

'நின்திரு எயிற்றால் இடந்துநீ கொண்ட

நிலமகள் கேள்வனே!'என்னும்,

'அன்றுரு வேழும் தழுவிநீ கொண்ட

ஆய்மகள் அன்பனே!'என்னும்,

தென்திரு வரங்கம் கோயில்கொண் டானே!

தெளிகிலேன் முடிவிவள் தனக்கே. 9

அரங்கா!என் மகள் நின் திருவடியில் சரணடைந்தாள்

3357. 'முடிவிவள் தனக்கொன் றறிகிலேன்'என்னும்

'மூவுல காளியே!'என்னும்,

'கடிகமழ் கொன்றைச் சடையனே!'என்னும்

'நான்முகக் கடவுளே!'என்னும்,

'வடிவுடை வானோர் தலைவனே!'என்னும்

'வண்திரு வரங்கனே!'என்னும்,

அடியடை யாதாள் போலிவள் அணுகி

அடைந்தனள் முகில்வண்ணன் அடியே. 10

இவற்றைப் படித்தோர் பேரின்பத்தில் மூழ்குவர்

3358. முகில்வண்ணன் அடியை அடைந்தருள் சூடி

உய்ந்தவன் மொய்புனல் பொருநல்,

துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்வண்பொழில்சூழ்

வண்குரு கூர்ச்சட கோபன்,

முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொன் மாலை

ஆயிரத் திப்பத்தும் வல்லார்,

முகில்வண்ண வானத் திமையவர் சூழ

இருப்பர்பே ரின்பவெள் ளத்தே. 11

நேரிசை வெண்பா

மாறன் பாடல்களால் மனம் தூய்மை அடையும்

கங்குல் பகலரதி கைவிஞ்சி மோதமுற,

அங்கதனைக் கண்டோ ரரங்கரைப்பார்த்து, - 'இங்கிவள்பால்

என்செய்நீ ரெண்ணுகின்ற ª 'தன்னுநிலை சேர்மாறன்,

அஞ்சொலுற நெஞ்சுவள்ளை யாம். (62)

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is உண்ணிலாவிய
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  வெள்ளைச் சுரிசங்கு
Next